search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் அடித்து கொலை
    X

    ஆந்திராவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் அடித்து கொலை

    • கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.
    • நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரெயில்வே கோடுர் பகுதியை சேர்ந்தவர் அரி நாராயணா. இவரது மகன் நவதித் (வயது 18).

    இவர் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.

    அப்போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நவதித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாகம் இது குறித்து விடுதி வார்டன் காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×