search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore murder"

    கோவையில் இன்று காலை தலையில் கல்லைப்போட்டு கஞ்சா வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விஜயன் என்ற விஜய்குமார் (வயது 45).

    இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பிளக்ஸ் பேனர் கட்டும் வேலை பார்த்து வந்தார். வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள சி.எம்.சி. காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தங்கினார்.

    இவர் மீது கோவையின் பல்வேறு போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அதே பகுதியில் படுத்தார். இன்று காலை அந்த வழியே சென்ற சிலர் பார்த்தபோது அங்கு விஜயன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதிமக்கள் இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விஜயன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவையில் இன்று காலை சினிமாவை மிஞ்சும் அளவுக்கு 2 வாலிபர்களை முன்விரோத தகராறில் 4 பேர் கும்பல் விரட்டி விரட்டி வெட்டி சாய்த்தனர்.
    கோவை:

    கோவை கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (19). இவர் மீது சரவணம்பட்டி போலீசில் ஒரு அடி-தடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி அவர் தினமும் கோவை ஜே.எம். எண்.2-வது கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    இன்று காலையும் பிரதீப் வழக்கம் போல் கையெழுத்து போட தனது நண்பர் தமிழ் (25) என்பவருடன் மொபட்டில் கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ஆகி பிரதீப் கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது பிரதீப் மொபட் ஓட்ட, பின்னால் அவரது நண்பர் தமிழ் உட்கார்ந்து இருந்தார்.

    கோர்ட்டில் இருந்து பிரதீப், தமிழ் ஆகியோர் வெளியே வந்ததும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த 4 பேர் கும்பல் அவர்களை விரட்டினர். இதையடுத்து பிரதீப் மொபட்டை வேகமாக ஓட்டினார். ஆனாலும் 4 பேர் கும்பல் அவர்களை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டினர். பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதியில் சினிமாவில் வருவது போல் கும்பல் 2 பேரை விரட்டி வெட்டினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரதீப், தமிழ் ஆகியோர் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே நிலைகுலைந்து கீழே விழுந்தனர். ஆனால் கொலை வெறி தீராத கும்பல் 2 பேரையும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து 4 பேர் கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    கோர்ட்டு, போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் 2 பேர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில்கிடந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களின் நிலைமை கவலை கிடமாக உள்ளது.

    போலீசாரின் முதல் கட்டவிசாரணையில் முன் விரோத தகராறு காரணமாக கணபதியை சேர்ந்த சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகிய 4 பேர் சேர்ந்து பிரதீப், தமிழ் ஆகியோரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோர்ட்டில் இருந்து உப்பிலி பாளையம் சிக்னல் வரை சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு விரட்டி, விரட்டி கும்பல் வெட்டியதால் ரோடு முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. மேலும் மொபட் முழுவதும் ரத்தக்கறை படிந்து கிடந்தது.
    கோவை எட்டிமடை அருகே வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    மேற்கு வங்க மாநிலம் பீர் பாரா பகுதியை சேர்ந்தவர் சோரன் மார்க்கஸ் (வயது 24).

    எர்ணாகுளத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று கோவை எட்டிமடை பகுதியில் மரத்தில் பெல்ட்டால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    கே.ஜி. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அவரை அடித்துக் கொலை செய்து பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்தது.

    அவரது சட்டைப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை மூலம் இறந்தது சோரன் மார்க்கஸ் என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதில் சோரன் மார்க்கஸ் விடுமுறையில் சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 19-ந் தேதி ரெயிலில் கேரளாவுக்கு திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எட்டிமடை வரக்காரணம் என்ன? அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது நேற்று முன்தினம் இரவு சோரன் மார்க்கசுடன் கே.ஜி.சாவடி அருகே உள்ள சாவடிபுதூரை சேர்ந்த பிரபாகரன்(24) என்பவர் சாவடி சந்திப்பு பகுதியில் தகராறு செய்தது தெரிய வந்தது.

    கூலி வேலை பார்த்து வரும் பிரபாகரன் மீது கே.ஜி. சாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர், நான் சாவடி சந்திப்பில் நின்ற போது சோரன் மார்க்கஸ் அங்கு வந்ததாகவும், அவரிடம் குடிக்க பணம் கேட்ட போது தர மறுத்ததால் கல்லால் அவரது தலையில் தாக்கியதாகவும், இதில் சோரக் மார்க்கஸ் இறந்து விட்டதால் பெல்ட்டில் கட்டி மரத்தில் தொங்க விட்டதாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட சோரன் மார்க்கஸ் எர்ணாகுளத்துக்கு செல்லும் வழியில் எட்டிமடையில் இறங்கியது ஏன்? என தெரியவில்லை. சோரன் மார்க்கசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்ததும் உடல் பிரேதபரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    கோவையில் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் பாபுராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பாக்கியம் குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பாபுராஜ் குடிபோதையில் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்தார். அவரை இங்கு வரக்கூடாது கள்ளக்காதலி வீட்டுக்கே செல்லுங்கள் என பாக்கியம் கூறினார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் பீர் பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயன்றார். இதனை பார்த்த அவர் அங்கு கிடந்த கட்டையால் கணவனின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    கணவரை கொலை செய்து விட்டோமே என்ற பயத்தில் பாக்கியம் தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்து கொசு விரட்டி மருந்து, மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    அதிகாலை 4 மணியளவில் தாயை தேடி வெளியே வந்த இவர்களது மூத்த மகள் தாய் தந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாபுராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி.

    இவரது மகன் முரளிதரன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி(24) என்பவருக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. டிப்ளமோ படித்துள்ள பாலாஜி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் நவின்பிரபு, பிரசாத் ஆகியோர் கெம்பட்டிகாலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு வந்த பாலாஜிக்கும், முரளிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிதரனின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

    ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த முரளிதரனை நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய பாலாஜியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான பாலாஜியும் பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாலாஜியுடன் பழகுவதை மாணவி நிறுத்தி விட்டார். அதன்பிறகு முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பேசி பழகி வந்துள்ளார். கடந்த 23-ந்தேதி மாணவியின் பிறந்த நாளையொட்டி அந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீடு அருகே சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வரலாம்? என கூறி தகராறு செய்துள்ளனர். கும்பலில் இருந்த பாலாஜி, நான் காதலித்த பெண்ணுடன் நீங்கள் எப்படி பேசலாம்? என கூறி இருவரையும் கண்டித்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக முரளிதரன் தப்பி சென்றார்.

    இச்சம்பவத்தில் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் விரோதம் உருவாகியது. நேற்று இரவு வேலை முடிந்து பாலாஜி வீட்டுக்கு நடந்து சென்ற போது அவரை முரளிதரனும், நண்பர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசமடைந்து அவர் முரளிதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    பாலாஜி கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே இன்று மரக்கட்டையால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் சிவசாமி (46). இவர் கடந்த 3 வருடமாக கணேசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள மெயின் ரோட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார்.

    இன்று காலை சிவசாமி வாக்கிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த வட மாநில வாலிபர் திடீரென மரக்கட்டையால் சிவசாமி தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சிவசாமியை மீட்டு கோவில் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிவசாமி இறந்தார். சிவசாமியை கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் எதுவும் பேச மறுக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட சிவசாமிக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
    கோவை ஒண்டிப்புதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கு அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள தண்ணீர் தோட்ட வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் அன்னூர் அருகே உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் கட்டுமான பணிக்காக சென்றார். பணி முடிந்ததும் தனது நண்பரான ஒண்டிப்புதூர் நவரச காலனியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக சென்றார்.

    அன்னூர்-சத்தி ரோட்டில் சந்தையூர் பரிவு அருகே வைத்து 2 பேரும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் வேல்முருகன் கூடுதலாக மது வாங்குவதற்காக பணம் கொடுக்கும்படி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தான் வைத்து இருந்த மரக்கட்டையால் முருகனின் தலை மற்றும் உடலில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் முருகனை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது20). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த லட்சுமிநாராயணசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    சாமி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவதில் மணிகண்டனுக்கும் மரப்பாலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதீஸ் (20), தாமோதரன் (27), விக்னேஷ் (20) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் குத்தி கிழித்தனர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் சுதீஸ், தாமோதரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கோவை மாவட்டம் சூலூர் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் அருண் (வயது 30). கால் டாக்சி டிரைவர்.

    இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோபால் (25), தேவேந்திரபாபு ஆகியோருடன் மது குடிப்பதற்காக பள்ளபாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றார்.

    பாரில் அருண் வாங்கிய ‘சைடு-டிஸ்’ பொருட்களுக்கு பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பார் உரிமையாளர் துரை என்ற முருகானந்தம்(41) என்பவர் அருணிடம் பணம் கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது அருண் பிராந்தி பாட்டிலால் துரையை தாக்கினார். இதைப் பார்த்த துரையின் நண்பரான ஆட்டோ டிரைவர் சதிஷ்(25) என்பவர் அருணை தடுத்தார். எனினும் அருண் பாரில் கிடந்த கட்டையை எடுத்து துரையை தாக்கினார். மேலும் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் துரையை தாக்க முயன்றுள்ளனர்.

    இதனால் ஆவேமடைந்த சதிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருணை குத்தினார். இதில் அவரது தலை, தோள் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    சதிஷ் தாக்கியதில் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் காயம் அடைந்தனர். உடனே சதிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    காயமடைந்த கோபால், தேவேந்திரபாபு ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதே போல தாக்குதலில் காயமடைந்த துரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சதிசை கைது செய்தனர். அருண் பல மாதங்களாக இந்த பாரில் வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பது கிடையாது என்றும், மது அருந்துபவர்களிடம் தகராறு செய்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அருணை பார்உரிமையாளர் துரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். நேற்றும் அருண் பாரில் தகராறு செய்வதாக வந்த தகவலின் பேரில் துரை, சதிசை அழைத் துக் கொண்டு பாருக்கு சென்றுள்ளார். அங்கு அருணிடம் ‘சைடு- டிஸ்’ பொருட்களுக்கான பணத்தை கேட்டபோது தான் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட அருண் உடல் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அருணுக்கு நித்யா(28) என்ற மனைவியும், தர்ஷினி (3) என்ற மகள், சுதர்சன்(1½) என்ற மகன் உள்ளனர்.
    கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கிரிக்கெட் மட்டையால் கணவரை மனைவி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவை:

    கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் ஞானம் (வயது 45). டிரைவர்.

    இவரது மனைவி உமா தேவி(39). இவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மாலினி(16) என்ற மகளும், பெல்வின்(7) என்ற மகனும் உள்ளனர்.

    மாலினி கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1, பெல்வின் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    ஞானத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. மனைவியிடம் இருந்து பணத்தை பறித்து சென்று குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.

    நேற்று இரவும் ஞானம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் உமாதேவி கண்டித்துள்ளார். மனைவியிடம் தகராறு செய்த ஞானம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க முயன்றார்.

    குடிபோதையில் மகனை தூக்கியதை பார்த்த உமா தேவி கணவரை எச்சரித்தார். அதன்பிறகும் ஞானம் கேட்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாதேவி அங்கு கிடந்த மகனின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவரை அடித்தார். இதில் அவரின் பின்தலை, முகத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி ஆம்புலன்சு வரவழைத்து ஞானத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கிரிக்கெட்மட்டையால் அடித்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்தார். அவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் தராததால் நான் வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். நேற்று இரவும் போதையில் வந்த அவர் மகனை தூக்கினார். அவர் மகனை கீழே போட்டு அவனுக்கு அடி பட்டு விடக்கூடாது என்பதால் மகனை விட்டு விடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை அடித்தேன்.

    இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
    ×