search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை- நண்பர் கைது
    X

    கோவை அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை- நண்பர் கைது

    கோவை ஒண்டிப்புதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கு அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள தண்ணீர் தோட்ட வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் அன்னூர் அருகே உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் கட்டுமான பணிக்காக சென்றார். பணி முடிந்ததும் தனது நண்பரான ஒண்டிப்புதூர் நவரச காலனியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக சென்றார்.

    அன்னூர்-சத்தி ரோட்டில் சந்தையூர் பரிவு அருகே வைத்து 2 பேரும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் வேல்முருகன் கூடுதலாக மது வாங்குவதற்காக பணம் கொடுக்கும்படி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தான் வைத்து இருந்த மரக்கட்டையால் முருகனின் தலை மற்றும் உடலில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் முருகனை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×