என் மலர்
செய்திகள்

மதுக்கரை அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
கோவை மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது20). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த லட்சுமிநாராயணசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
சாமி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவதில் மணிகண்டனுக்கும் மரப்பாலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதீஸ் (20), தாமோதரன் (27), விக்னேஷ் (20) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் குத்தி கிழித்தனர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் சுதீஸ், தாமோதரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது20). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த லட்சுமிநாராயணசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
சாமி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவதில் மணிகண்டனுக்கும் மரப்பாலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதீஸ் (20), தாமோதரன் (27), விக்னேஷ் (20) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் குத்தி கிழித்தனர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் சுதீஸ், தாமோதரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story






