search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student arrest"

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வாணியம்பாடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி டொக்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் இவருடைய மகள் ஜாக்கியா (வயது 29).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இறந்து போன பெண் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் முகமது நிப்ராஸ் சையான் (20) என்பவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது20). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த லட்சுமிநாராயணசாமி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    சாமி ஊர்வலத்தின் போது நடனம் ஆடுவதில் மணிகண்டனுக்கும் மரப்பாலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதீஸ் (20), தாமோதரன் (27), விக்னேஷ் (20) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் குத்தி கிழித்தனர். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் சுதீஸ், தாமோதரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    சென்னை அசோக்நகரில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவர் வேலை காரணமாக சென்னை வந்தார். அப்போது அசோக் நகர், சாலையில் உள்ள சிக்னல் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற இளவரசு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம வாலிபர் இளவரசுவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

    இதுகுறித்து அசோக் நகர் போலீசில் இளவரசு புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சங்கர் கொள்ளைபோன செல்போன் ஐ.எம்.இ நம்பரை கொண்டு ஆய்வு செய்து அதை பயன்படுத்தி வந்த கண்ணம்மாபேட்டை கார்ப்பரே‌ஷன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது19) என்பவரை கைது செய்தார்.

    அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.

    அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.
    சென்னையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் (வயது 20). இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாணவியின் தாயார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முத்து மாணிக்கம் விசாரணை நடத்தினார். இதையடுத்து கல்லூரி மாணவர் ரூபனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்ததின் பேரில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் முத்து தெருவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மாலதி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியை சேர்ந்த ரூபன் (20) என்ற கல்லூரி மாணவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாணவியின் தாயாருக்கு தெரிந்தவுடன் அவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தனது மகளை ஆசை வார்த்தை கூறி ரூபன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறி இருந்தார்.

    அதன் அடிப்படையில் உதவி கமி‌ஷனர் முத்து மாணிக்கம் விசாரணை நடத்தினார். அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி மைனராவார். ஆதலால் கல்லூரி மாணவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட மாணவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மாணவியின் தாயார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவி விசாரணையின் போது தெரிவித்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந்தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மேற்பார்வையில், கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    அதில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார்(19) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ராமன் மாயமான அன்றைய தினம், தனது வீட்டில் இருந்து சென்ற போது அவருடன் சந்தோஷ்குமாரும் சென்றதை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து போலீசாருக்கு சந்தோஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். இதுபற்றி அறிந்த, காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


    கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார்-அனிதா

    அப்போது கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

    ராமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் எனது சொந்த கிராமமான சொர்ணாவூரில் கடந்த ஆண்டு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அங்கு சென்ற நான், ராமன், அவரது மனைவியிடம் பேசி பழகினேன். இந்த பழக்கத்தால், ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

    இந்த நிலையில் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இதையடுத்து அடிக்கடி ராமன் எனக்கு போன் செய்து அழைத்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார்.

    இதற்கிடையே, அனிதாவுக்கும் எனக்கும் உள்ள பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் கள்ளகாதலுக்கு ராமன் இடையூறாக இருந்தார்.

    ஒரு கட்டத்தில் ராமனுடன் உள்ள ஓரினச்சேர்க்கை விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானகிவிடும் என்பதால் நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை கட்டாயப்படுத்தி ராமன், அவருடைய ஆசைக்கு இணங்க செய்து வந்தார்.

    இதையடுத்து, அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர், ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அப்போது, நான் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம்.

    பின்னர் ராமனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்தேன். தூக்க மாத்திரை கலந்து இருப்பது பற்றி தெரியாமல், அவர் அதை குடித்து முடித்த, சிறிது நேரத்தில் ராமன் மயங்கி விழுந்தார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தது போல் இருப்பதற்காக அவரது உடலை கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராமனின் மனைவி அனிதாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ராமனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.

    அப்போது பண்ருட்டி மேல்பாதி சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் எண்ணிற்கு ராமன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராமனை, சந்தோஷ்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு:-

    சந்தோஷ்குமார் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சொர்ணாவூரில் ராமனின் அக்காள் வீடு உள்ளது. அங்கு ராமன் அடிக்கடி வருவார். அவரது அக்காள் மகளும், சந்தோஷ்குமாரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதனால் அடிக்கடி ராமனின் அக்காள் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார்.

    அப்போது ராமனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.

    இந்த நிலையில் சந்தோஷ் குமாரும், ராமனும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    அதன் பிறகு ராமன் செல்போன் மூலம் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். வரமறுத்தாலும் அவரை தொடர்ந்து ராமன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த பழக்கம் வெளியில் தெரிந்து விட்டால் அவமானமாகி விடும் என்பதால் ராமனை கொலை செய்ய சந்தோஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

    கடந்த 14-ந் தேதி அன்று பணிக்கன்குப்பம் முந்திரி காட்டுக்கு வருமாறு சந்தோஷ்குமாரை, ராமன் அழைத்துள்ளார். உடனே சந்தோஷ்குமார் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து ராமனுக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

    அதன் பின்னர் கைலியால் ராமனின் கழுத்தை இறுக்கி சந்தோஷ்குமார் கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பதுபோல் இருப்பதற்காக அவரது உடலில் கயிற்றை கட்டி அங்குள்ள மரத்தில் சந்தோஷ்குமார் தொங்க விட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    காரைக்குடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை மேல மணக்குடியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவியை அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு நடந்து வந்தார். அப்போது எதிரே மணிகண்டன் (17) என்ற வாலிபர் வந்தார்.

    அவரை கண்டதும் அந்த சிறுமி தாயாரின் பின்னே சென்று ஒளிந்தாள். ஏன் அவரை பார்த்ததும் இப்படிச் செய்கிறாய்? என்று தாயார் கேட்டதும் அந்த சிறுமி தேம்பி தேம்பி அழுதாள்.

    வீட்டுக்கு சென்றதும் சிறுமியிடம் தாயார் விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை தனியே அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். விசாரணையில் அவர் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து மணிகண்டனிடம் விசாரணை நடைபெறுகிறது.
    மீஞ்சூர் பஜாரில் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் பஜாரில் பெண்களை 4 வாலிபர்கள் கிண்டல், கேலி செய்வதாகவும் வயதான 2 பெண்களை தாக்குவதாகவும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்றார். போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பிஓடி விட்டனர். ஒருவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் பிடித்தார்.

    குடி போதையில் இருந்த அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரை அசிங்கமாக பேசி கையால் அடித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாக தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
    ×