தோல்வி பயத்தில் இருந்த நண்பனுக்காக ஆள்மாறாட்டம் செய்து பிளஸ்-1 தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்

ஒருவரது நடவடிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தோல்வி பயத்தில் இருந்த நண்பனுக்காக ஆள்மாறாட்டம் செய்து பிளஸ்-1 தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பிளஸ்-1 வகுப்புக்கான மேம்பாட்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. நாதாபுரத்தில் உள்ள கடமேரி ஆர்.ஏ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.

அதில் ஒருவரது நடவடிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் அவரது விவரத்தை சரிபார்த்தார். இதில் சந்தேகம் மேலும் அதிகமானதால் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்குரியவர், ஆள்மாறாட்டம் செய்து தனது நண்பருக்காக தேர்வு எழுதுவது தெரியவந்தது. அவரது பெயர் இஸ்மாயில். கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் தோல்வி பயத்தில் இருந்ததால் அவருக்காக தேர்வு எழுத வந்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயிலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com