என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது
- நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- சிறுமியை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
அப்போது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பத்ரிநாத் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் பத்ரிநாத் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மருதமலை அடிவாரத்தில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த தனது தாயிடம் பத்ரிநாத் மாணவிக்கு 18-வயது கடந்து விட்டதாகவும், 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரையும் வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது பத்ரிநாத் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு கடந்த 20-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த போது மாணவி 18 வயதிற்கு முன்பே கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 16 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் பத்ரிநாத்தை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்