என் மலர்
நீங்கள் தேடியது "Ganja Merchant Murder"
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது24).
இவர் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் மெயின் டீலராக செயல்பட்டு வந்தார். மேலும் முரளி மீது பல்வேறு குற்ற வழக்குகள் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிஅளவில் அதேபகுதி அண்ணா நகர் அருகே குளக்கரையை ஒட்டி உள்ள வடுகாத்தம்மன் கோவில் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக முரளியுடன் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் யார்?யார்? அவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விஜயன் என்ற விஜய்குமார் (வயது 45).
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பிளக்ஸ் பேனர் கட்டும் வேலை பார்த்து வந்தார். வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள சி.எம்.சி. காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தங்கினார்.
இவர் மீது கோவையின் பல்வேறு போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அதே பகுதியில் படுத்தார். இன்று காலை அந்த வழியே சென்ற சிலர் பார்த்தபோது அங்கு விஜயன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதிமக்கள் இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விஜயன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் அபுதாகீர்(வயது 43). கஞ்சா வியாபாரி.
சம்பவத்தன்று இரவு இவர் குனியமுத்தூர் ரெயின்போ காலனி பகுதியில் மயங்கி கிடந்தார். அவரது வாயில் ரத்தக் காயம் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்து அபுதாகீரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அபுதாகீரை இடையர்பாளையத்தை சேர்ந்த அராத்நிசார், அனந்த், கோபி என்கிற கோபிநாத், சுகுணாபுரத்தை சேர்ந்த பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல், முகமது ஹூசைன் (40) ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனைக்கு பிரிப்பதற்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த கோபிநாத், முகமது ஹூசைன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அராத் நிசார், அனந்த், பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் லோகு (வயது 45). இவர் அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்தார்.
ராஜ்குமார் அந்த பகுதியில் உள்ள ரேசன் கடையில் தினக்கூலி பணியாளராக உள்ளார். சம்பவத்தன்று லோகு கஞ்சா சப்ளை செய்ததற்குரிய பணத்தை ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது முழு பணத்தையும் கொடுக்காமல் ராஜ்குமார் ஏமாற்றியதால் லோகு இதனை தட்டிக் கேட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராஜ்குமார் அரிவாளால் லோகுவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து கடமலைக்குண்டுபோலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வந்தனர். இதனிடையே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.






