என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Woman Murder"

    • ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார்.
    • கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருச்சி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22)என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5-வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீரா ஜாஸ்மின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

    இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.

    உடலின் அருகே அவரது கைப்பை, செல்போன், காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன. உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார். இதனால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதன் காரணமாக பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டதாரி மாணவி மீரா ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் புலன் விசாரணை முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    • தவுபிக்கிடம் சகோதரன் போல நேஹா பழகி வந்தாலும், தவுபிக் நேஹாவை காதலித்து வந்துள்ளார்.
    • படுகாயமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் நேஹா (வயது19). அவரது குடும்பம் அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    நேஹா அங்குள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேஹாவின் தந்தையும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேஹாவும் அதே பகுதியைச் சேர்ந்த தவுபிக் என்ற வாலிரும் சிறு வயது முதலே ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

    தவுபிக்கிடம் சகோதரன் போல நேஹா பழகி வந்தாலும், தவுபிக் நேஹாவை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தவுபிக் நேஹாவை வற்புறுத்தியுள்ளார். நேஹா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே நேஹாவை தொடர்ந்து தவுபிக் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று அதிகாலையில் நேஹா வீட்டின் மாடிக்கு சென்ற தவுபிக் அங்கு துணி துவைப்பதற்காக வந்த நேஹாவை கழுத்தைப் பிடித்து நெரித்து மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த நேஹாவின் தந்தையை தாக்கி விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி சென்றார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தவுபிக் பர்தா அணிந்து வந்துள்ளார். படுகாயமடைந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேஹா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தவுபிக்கை கைது செய்தனர்.

    • தன்னை தாக்கிய வாலிபருக்கும் சாய்ராவுக்கும் தொடர்பு இருக்கும் என ரபி சந்தேகம் அடைந்தார்.
    • சாய்ராவை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு தூங்கியதாக தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கோட்வாலி மைந்தரை சேர்ந்தவர் சாய்ரா (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் ரபி.

    சாய்ராவை காதலிப்பதாக கூறி ரபி அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

    ஆனால் இளம்பெண் ரபியை காதலிக்க மறுத்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை நடுவழியில் மடக்கி ஆபாசமாக திட்டினார். அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்து ரபியை சரமாரியாக தாக்கினார்.

    தன்னை தாக்கிய வாலிபருக்கும் சாய்ராவுக்கும் தொடர்பு இருக்கும் என ரபி சந்தேகம் அடைந்தார். இதனால் தனக்கு கிடைக்காத சாயிரா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சாய்ரா எங்கெல்லாம் செல்கிறார் என நோட்டமிட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சாய்ரா மாட்டுக்கு தீவனம் எடுத்து வர வயலுக்கு சென்றார். சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் சரமாரியாக குத்தினார். வயிறு, முகம், கை, கால், மர்ம உறுப்பு என 18 இடங்களில் குத்தினார்.

    வலியால் அலறி துடித்த சாய்ரா தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனாலும் மனம் தளராத ரபி அவரை குத்தி கொலை செய்தார். பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டுச் சென்றார்.

    வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் சாய்ராவை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடிப் பார்த்தனர்.

    நேற்று அங்குள்ள கால்வாயில் சாய்ரா இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ராவின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சாய்ராவின் போனை போலீசார் சோதனை செய்தபோது ரபி 5 தடவை மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது.

    போலீசார் ரபியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை காதலிக்க மறுத்த சாய்ராவை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு தூங்கியதாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரபியை கைது செய்தனர்.

    • அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்து வாழும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது18).

    நேற்று காலை அம்சவல்லி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் வீட்டில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    வீட்டில் சங்கீதா தனியாக இருப்பதை அறிந்து வந்த ராஜு அவரிடம் தவறாக நடக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜுவை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன? மற்றும் கொலை எப்படி நடந்தது? என்பது தெரியவரும்.

    • ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் சில ஆண்டுகள் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இவருக்கும், கணவரை இழந்த பெண்ணான ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த செல்வ ராணி (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்வராணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் ஹரி பிரசாத், செல்வராணியுடன் தனி குடித்தனம் நடத்தி வந்தார்.

    ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர். அங்கும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் செல்வராணியின் நடத்தையில் ஹரிபிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வந்த ஹரிபிரசாத், அவரிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், செல்வராணியை சரமாரியாக அடித்து உதைத்தார். அதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பெண் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணியை அடித்துக் கொன்ற ஹரிபிரசாத்தை கைது செய்தனர்.

    பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர்.
    • தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரில் தனது சகோதரி பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    இதையடுத்து போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் கடைசியாக யாரெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஷபீர்அகமது வானி என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து ஷபீரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வரு று:-

    ஷபீர் திருமண வரன்களை அமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது தன்வீர் அகமது குடும்பத்துக்கு அறிமுகமாகி உள்ளார். தன்வீர் தனது சகோதரியின் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று ஷபீரிடம் தெரிவித்தார். ஷபீர் ஓரிரு நாட்களில் ஒரு வரனின் புகைப்படத்தை தன்வீரிடம் கொடுத்து இந்த மாப்பிள்ளை உங்கள் தங்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார்.

    அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

    இதையடுத்து திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் ஷபீருக்கும், தன்வீரின் சகோதரிக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது, ஊரை சுற்றிப்பார்ப்பது என்று இருந்துள்ளனர்.

    ஷபீர் ஒரு கட்டத்தில் தன்வீரின் சகோதரியை காதலிக்க தொடங்கினார். சில மாதங்களாக அவர்கள் ஒன்றாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் ஷபீர் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால் அவரது காதலை தன்வீரின் சகோதரி ஏற்காததுடன் திருமணத்துக்கும் மறுத்துள்ளார். அதன்பிறகு ஷபீருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்தினார்.

    இதை ஷபீர் எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் கெஞ்சினார். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

    கடந்த 7-ந்தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு போன் செய்த ஷபீர் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் கடைசி முறை இதன்பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ஷபீர் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஷபீரை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து ஷபீரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது ஷபீர் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர் கத்தியால் அந்த பெண்ணின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதையடுத்து ஷபீர், அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார். பின்னர் அதை ஓம்புரா பகுதியில் பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஷபீரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மெயின் ரோடு 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 39). இவரது மனைவி செல்லப்பிரியா (32). விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று இரவு விமல் மற்றும் செல்லப்பிரியாவின் சகோதரர் செல்லப்பாண்டி (34) ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது செல்லப்பாண்டி தனது தங்கையின் நடவடிக்கை குறித்து விமலிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு விமல் உன் தங்கையை என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தங்கையிடம் செல்லப்பாண்டி எனக்கு சேர வேண்டிய நகையை கொடுத்து விட்டு உன் கணவனுடன் கேரளாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகிய 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.

    கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
    • போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.

    பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.

    இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார்.

    போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

    • கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே புளி சாத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் இன்று காலை 11 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை மர்மநபர்கள் யாரோ அடித்து கொன்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

    இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு ரெயில்வே ஊழியர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பெண்ணின் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பெண்ணை வேறு எங்காவது இருந்து கடத்தி வந்து கொலை செய்து பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×