search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் நடத்தை சந்தேகத்தால் இளம்பெண் அடித்துக்கொலை- கட்டிட தொழிலாளி கைது
    X

    ராமேசுவரத்தில் நடத்தை சந்தேகத்தால் இளம்பெண் அடித்துக்கொலை- கட்டிட தொழிலாளி கைது

    • ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் சில ஆண்டுகள் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இவருக்கும், கணவரை இழந்த பெண்ணான ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த செல்வ ராணி (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்வராணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் ஹரி பிரசாத், செல்வராணியுடன் தனி குடித்தனம் நடத்தி வந்தார்.

    ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர். அங்கும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் செல்வராணியின் நடத்தையில் ஹரிபிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வந்த ஹரிபிரசாத், அவரிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், செல்வராணியை சரமாரியாக அடித்து உதைத்தார். அதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பெண் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணியை அடித்துக் கொன்ற ஹரிபிரசாத்தை கைது செய்தனர்.

    பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×