என் மலர்
நீங்கள் தேடியது "son arrested"
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை மல்லி போலீசார் கைது செய்தனர்.
- மது போதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.
அப்போது ஆறுமுகம் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.
ஆனால் ஆறுமுகத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமாராணி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 10-ம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தும், அப்போது மகன் மணிகண்டன் தாக்கியதில் ஆறுமுகம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
- தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.
பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டீஸ்வரம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள தில்லையம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 75). இவரது மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ராஜேந்திரன் (50) உள்பட 2 மகன் உள்ளனர். இதில் ராஜேந்திரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வெகுநேரம் வீட்டின் கதவு திறந்து கிடந்தாலும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கோவிந்தராஜ், லட்சுமி ஆகிய 2 பேரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகில் ராஜேந்திரன் இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராஜேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரன் திடீரென தாய், தந்தையை அரிவாளால் வெட்டி கொன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். எதற்காக தாய், தந்தையை வெட்டி கொன்றார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோரை மகன் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. 4 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார்.
நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.
குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.
இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 5 மகன்களும், ஒரு மகளும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
- ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமு த்துவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி பூசை மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் காளிமுத்து(வயது 85). இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உண்டு. 6 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காளிமுத்து தனது மனைவி இந்திராணியுடன் வசித்து வருகிறார். காளிமுத்துவின் 4-வமு மகன் கலியமூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக, தனியாக வசித்து வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன், தந்தையை கத்திரிகோலால் தாக்கி நிரவி போலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறை சென்றார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமுத்துவின் மனைவி இந்திராணியை கல்லால் அடித்து, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். தொடர்ந்து, மீண்டும் ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமு த்துவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சாப்பிட்டு க்கொண்டிருந்த தந்தை காளிமுத்துவை கையால் அடித்து கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, மனைவி இந்திராணி, தந்தையை பார்க்கவந்த மகள் அமுதா ஆகியோர் காளிமுத்துவை காப்பாற்றி, காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, காலிமுத்து நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கலியமூர்த்தியை மீண்டும் கைது செய்து, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
- தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
- ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 71). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ரவி(44) உள்பட 5 மகன்கள் உள்ளனர். தந்தை- மகன்களுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி அவரது முந்திரி தோட்டத்தில் டிராக்டரை எடுத்து கொண்டு உழவுப்பணி செய்ய சென்றுள்ளார். அப்போது தந்தை, மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ரவி முந்திரிக்கட்டையால் தாக்கியதில் ராஜகோபால் காயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்."
- வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
- பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே தெற்கு ராமபுரம் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 38). இவர் தனது தாய் ருக்குமணியிடம் சொத்தை எழுதி தர கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ருக்குமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மகன் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
- அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.
அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.