என் மலர்
நீங்கள் தேடியது "Bhupesh Baghel"
- சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.
இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.
ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.
- சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார்
- மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்
இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார்.
இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பூபேஷ் உரையாற்றினார்.
அம்மாநிலத்தில் சுமார் 1.6 கோடி மக்கள் பேசும் சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பெண்களின் பாதுகாப்பு அதி முக்கியம் வாய்ந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் இனி மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்" என அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் நகரங்களில் இருந்து தொலைதூர பகுதியில் வாழும் மாணவர்களும் மாணவிகளும் இந்தியாவின் முக்கிய நுழைவுத்தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதுபோன்று பல திட்டங்களை பூபேஷ் பகேல் அறிவித்திருந்த போதும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சத்தீஸ்கர் மாநில பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார்.
- அப்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் நடப்பு 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார். அதன்படி 18முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவை தவிர அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500-ல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ராய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரு.2,500 உதவி தொகை வழங்கப்படும்.
* ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
- காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
ராய்பூர்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.
- இதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ராய்ப்பூர்:
மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூபேஷ் பாகல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினென்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவர் கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
தீபாவளி தினத்துக்கு அடுத்த நாளன்று நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. இந்திரனிடம் இருந்து மக்களை காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதைக் குறிக்கும் விதமாக இப்பூஜையை மக்கள் கொண்டாடுகின்றனர். சத்தீஷ்கார் மாநிலத்திலும் கோவர்த்தன பூஜை வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.
இந்நிலையில் துர்க் நகரில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் பங்கேற்று வழிபட்டார். அங்கு கோவர்த்தன பூஜை வழிபாட்டு வழக்கப்படி அவர் ‘சாட்டை’ அடியும் பெற்றார்.
பாரம்பரிய உடையும், தலைப்பாகையும் அணிந்திருந்த பூபேஷ் பாகல், தனது வலது கையை விறைப்பாக நீட்டியபடி நின்றார். அவர் கையை தடவிப்பார்த்த ஒருவர், சாட்டையால் 8 முறை ஓங்கி ஓங்கி அடித்தார்.
அப்போது சிறிதும் முகம் சுழிக்காமல், கையை மடக்காமல் அசையாது முதல்-மந்திரி நின்றார். சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்து நின்றிருந்த அவ்வேளையில், மேளதாளங்கள் ஓங்கி ஒலித்தன. சுற்றி நின்ற பலர், அக்காட்சிகளை தங்கள் செல்போன்களில் படம் எடுத்தனர்.
8 முறை அவரது கையில் சாட்டையால் அடித்தபின், சாட்டைக்காரர் முதல்-மந்திரியை கட்டித்தழுவிக்கொண்டார்.
இதுதொடர்பான 23 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பரவியுள்ளது.
இந்த ‘சாட்டையடி சடங்கை’ செய்வதால், ஒருவரின் வாழ்வில் பிரச்சினைகள் விலகி, மகிழ்ச்சி மலரும் என்பது சத்தீஷ்கார் பக்தர்களின் நம்பிக்கை.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.
சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet
