என் மலர்
நீங்கள் தேடியது "Chhattisgarh assembly election"
- ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
- பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.
கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
- மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
- வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.
"பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."
"மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."
"நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
- ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்டவர் பாகேலுக்கு தர இருப்பதாக கூறினார்
- ஏமாற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விடாது என மோடி தெரிவித்தார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
இம்மாதம் அங்கு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வும் தீவிரமாக முயன்று வருகின்றன. பா.ஜ.க. சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவர் துபாயில் இருந்தவாறு "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" என செயலி ஒன்றை வடிவமைத்தனர். இந்த சூதாட்டத்திற்கான செயலியில் எந்த நிலையிலும் நிறுவனம் பணத்தை இழக்காதவாறு மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிதாக விளையாட விரும்புவோர் முதலில் சிறு லாபம் பெறும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஆடும் போது பெரும் தொகையை வைத்து ஆட தொடங்கி அதில் பெரும் நஷ்டம் வரும் வகையிலும், இந்த செயலியை திட்டமிட்டு அமைத்திருந்தனர். இதன் மூலம் பல கோடிகள் லாபமடைந்தனர் இதன் நிறுவனர்கள்.
இந்நிலையில், அமலாக்க துறையினரால் ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கு பணம் கொண்டு செல்லும் ஊழியர் ஒருவர் அதனை 'பாகேல்' எனும் ஒருவருக்கு தர இருப்பதாகவும், முன்னரே ரூ.508 கோடி அவருக்கு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சத்தீஸ்கர் முதலவர் பூபேஷ் பாகேல் அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உங்களை ஏமாற்றி பணம் பறிக்க காங்கிரஸ் எந்த வாய்ப்பையும் தவற விடாது. அவர்கள் 'மகாதேவ்' எனும் கடவுளை கூட விடவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தை சுரண்டிய அனைவரும் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் ஏமாற்றிய ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வைப்போம். இது போன்ற ஊழல்கள் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு ஏமாற்றியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு மோடி கூறினார்.
- சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.
சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.
சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.
அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி நடந்த தேர்தலில் சுமார் 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது.
இரண்டுகட்ட தேர்தல்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் சராசரியாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவானதாக புதுடெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் உமேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #voterturnout #Chhattisgarhpolls #Chhattisgarh2ndphasepolls
90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந்தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந்தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இது நடப்பதால் 5 மாநில தேர்தல் அதற்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்புகளில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய கருத்துக்கணிப்பை ஏ.பி.பி.நியூ- லோக்நிதி சி.எஸ்.டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றி வாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. #BJP #Congress
காங்கிரசே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி சவால் விட்டு பேசி வருகிறார். அவர் சொன்னது போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஒவ்வொன்றாக பாரதிய ஜனதா கைப்பற்றி வருகிறது. சொல்லி அடிப்போம் என்பது போல் மோடியின் நடவடிக்கை தீவிரமாக இருக்கிறது.
தற்போது கர்நாடகாவும் பறிபோய் விட்டதால் பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டமாகும்.
அடுத்ததாக டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.
அப்போது பாரதிய ஜனதாவுக்கு 41.04 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.29 சதவீத ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
இதற்கான பணிகளை செய்யும்படி ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். அங்குள்ள 27 மாவட்டங்களிலும் மக்களின் மனநிலை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தேர்தல் பிரசார திட்டங்களை வகுக்கும்படியும் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ராகுல்காந்தி விரைவில் அங்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.
இதே போல் ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களிலும் அதிக அளவில் கவனம் செலுத்த உள்ளனர். #RahulGandhi #Congress