என் மலர்
நீங்கள் தேடியது "Maoists"
கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.
அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.
கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection
90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.
முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.
அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புபடை உள்ளிட்டவற்றில் வீரதீர செயல்கள் புரிந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவில் 500-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்துக்குள் நுழைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளை சூறையாடினர். இதில் 14 போலீசார் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் மாவோயிஸ்டுகள் அனைவரும் அங்கு உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதி, தன்னுடைய படை வீரர்களுடன் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தார். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பிரமோத் குமார் சத்பதி வீர மரணம் அடைந்தார்.
அவருடைய ஒப்பற்ற தியாகத்தையும், வீரத்தையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக கேரள மாநில எல்லையிலும் வனப்பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவையில் இவர்களின் நடமாட்டம் குறித்து 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அந்தந்த மாவட்ட போலீசார் ரகசிய விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய வனப் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட வனப்பகுதி தவிர மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் கிடையாது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து ஈரோடு போலீசாருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்ததாகவும் அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தங்கி இருப்பதாகவும், அவர்களால் எந்த அபாயமும் ஏற்படலாம், கொரில்லா தாக்குதலிலும் ஈடுபடலாம் எனவும் கூறப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் இடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாரிடம் கேட்டபோது, “இது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை. கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்களும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் இன்று மாலைமலர் நிருபர் கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது:-
எனது பார்வைக்கும் இது வந்தது. மாவோயிஸ்டு ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கொரில்லா தாக்குதல் நடத்த இருப்பதாகவும் சொன்னார்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை.
மேலும் இதுபற்றி கியூ பிராஞ்சு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். நாங்களும் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை மாவோயிஸ்ட் யாரும் சிக்கவில்லை.
வனப்பகுதிகளான சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளிலும் 24 மணி நேரம் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.
இவ்வாறு எஸ்.பி.சக்தி கணேசன் கூறினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக ரூபேஷ் திருச்சூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
சைனா ஜாமீனில் வெளியே இருப்பதால் அவர் கோர்ட்டுக்கு வந்தார். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி சக்திவேல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ரூபேஷ் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
மாவோயிஸ்டுகள் 5 பேரும் தங்கள் வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் ரூபேஷ் மனு மீதான விசாரணையையும் நீதிபதி ஒத்திவைப்பதாக கூறினார்.
கோர்ட்டில் ஆஜராக அழைத்து வந்த போது மாவோயிஸ்டுகள் வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோஷம் எழுப்பினார்கள். இந்துத்வாவை வேரறுப்போம் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர்.
அவர்கள் பல்கலைக் கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிளக்ஸ் போர்டுகளையும் கட்டினர்.
சுவரொட்டியில் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளின் 14-ம் ஆண்டு பிறந்த நாள் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது. பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழிகேட்டனர். காலையில் அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழி கேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்துவிட்டனர்.
மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடி பொருளை வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடி பொருளை வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவை வெடி பொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் நடமாட்டம அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர். பிறகு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சந்திரபாபு நாயுடு அரசு கொறடா பொறுப்பை வழங்கி இருந்தது.
இவர் தனது அரக்கு தொகுதியில் உள்ள குடா கிராமம் உள்பட பல இடங்களில் கருங்கல் குவாரிகளை நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதம் அடைவதாக பழங்குடி இன மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதோடு கிடாரி சர்வேஸ்வரா ராவுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மக்களை பாதிக்கும் செயல்களை சர்வேஸ்வரா ராவ் நிறுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கடிதம் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் எச்சரித்தனர். அதை சர்வேஸ்வரா ராவ் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் கடிதங்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் குறித்து ஆந்திர போலீசார் கடந்த சில மாதங்களாக அடிக்கடி எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவை உஷார்படுத்தியபடி இருந்தனர். ஆனால் சர்வேஸ்வர ராவ் போலீஸ் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வார காலத்தை தங்கள் அமைப்பின் உதய வாரமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்தனர். எனவே இந்த கால கட்டத்தில் மாவோயிஸ்டுகள் கொலை பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் பிரத்யேகமாக கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை உதய தினம் கொண்டாடுவதால் நீங்கள் இந்த ஒரு வாரம் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வீட்டிலேயே இருப்பது நல்லது” என்று அறிவுறுத்தி இருந்தனர்.
போலீசாரின் இந்த குறிப்பிட்ட எச்சரிக்கையையும் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உதாசீனப்படுத்தினார். ஆந்திரா-ஒடிசா எல்லை அருகே தனது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நேற்று நடந்த “கிராமதர்சினி” திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் சென்றிருந்தார்.
பிறகு அவர்கள் இருவரும் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
துடாங்கி எனும் கிராமம் அருகே அவர்கள் கார்கள் வந்து கொண்டிருந்தபோது ஏராளமான பெண் தீவிரவாதிகள் உள்பட சுமார் 40- மாவோயிஸ்டுகள் வழி மறித்தனர். கார்கள் நின்றதும் பின்னால் இருந்து வந்த சுமார் 20 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் 60 பேரும் நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.
எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்களுக்கு பாதுகாப்பாக சென்றிருந்த 2 போலீசார் உள்பட சிலர் காரில் இருந்து இறங்கி சென்று மாவோயிஸ்டுகளை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். உடனே மாவோயிஸ்டுகள் காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடுமாறு உத்தரவிட்டனர்.
பயந்து போன காவலர்கள் அடுத்த நிமிடமே துப்பாக்கிகளை கொடுத்து விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகள் காரில் இருந்து எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவையும், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவையும் காரில் இருந்து இறக்கினார்கள். பிறகு அவர்களை அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 நிமிடங்கள் எம்.எல்.ஏ.வுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது.
மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை கோர்ட்டில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம். அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அடுத்ததாக சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றனர்.
சர்வேஸ்வரா ராவை நோக்கி மாவோயிஸ்டுகள் மொத்தம் 6 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ.வின் உடல் சல்லடையாக துளைக்கப்பட்டது. அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பிறகு அவர்களது உடல்களை போட்டு விட்டு மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உடலை மீட்டு விசாகப்பட்டினத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் சர்வேஸ்வராராவ் குடும்பத்தினரும் அங்கு விரைந்தனர்.
இதையடுத்து பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

இதற்கிடையே தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் போலீசார் மீது தாக்குதல்கள் நடந்தன. அதுமட்டுமின்றி எதிரே வந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சூறையாடி னார்கள்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கலவரத்தால் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை விசாரித்தார்.
கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் ரோந்து சென்று மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்தது.
தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளின் சிறப்பு மண்டல கமிட்டி தலைவராக இருக்கும் பிரதாப் ரெட்டி என்ற சலாபதி தலைமையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இவர் தாக்குதல் நடந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே தாக்குதலை மிக மிக திட்டமிட்டு மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது தெரிகிறது.
இதற்கிடையே போலீசாரில் சிலர் சலாபதியின் மனைவி அருணா தலைமையிலான மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக சொல்கிறார்கள். முதலில் ஆந்திரா-ஒடிசா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது சலாபதியின் கைவரிசை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான மாவோயிஸ்டுகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். #TDPMLA #MLAKidariSarveswaraRao