search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை.
    • 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?

    புதுடெல்லி:

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:- அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் முடக்க சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி.
    • இந்த நோட்டீஸ் நிதி ரீதியல் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் வருமானம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ததில் தவறு இருப்பதாக 200 கோடி ரூபாய் செலுத்த நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் வரி தீர்ப்பாயம் மூலம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    இதனால் டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் எந்தவிதமான நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இதனால் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறது.

    உயர்நீதிமன்றம் காங்கிரஸ்க்கு நிவாரணம் அளிக்க முன்வராத நிலையில், தற்போது சுமார் 1823 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் புதிய நோட்டீஸ் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

    இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த நிதி ஆண்டுக்கான 7 கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
    • வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டுக்கான 7 கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 7 கோடியே 15 லட்சம் கணக்குகள், வரி செலுத்துவோரால் சரிபார்க்கப்பட்டன. அவற்றில், 6 கோடியே 80 லட்சம் கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம்.

    அதாவது, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 93.5 சதவீத கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம்.

    நேரடி வரிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி 'ரீபண்ட்' (திருப்பி அளிக்கும் தொகை) அளித்துள்ளோம்.

    நிதி ஆண்டு முடியும்போது, பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட நேரடி வரி வசூல் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

    அதே சமயத்தில், 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய 'ரீபண்ட்' நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், அவர்கள் அளித்த தகவல்கள் ஒத்துப்போகவில்லை. வங்கி கணக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது வங்கி, பிற வங்கியுடன் இணைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஐ.எப்.எஸ்.சி. எண் மாறி இருக்கலாம்.

    அதனால், அந்த வரி செலுத்துவோரை வருமான வரித்துறை ஊழியர்கள் சிறப்பு கால்சென்டர் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும்.

    வரி செலுத்துவோரின் சரியான வங்கி கணக்கில் 'ரீபண்ட்' செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

    வீட்டுக்கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    60 முதல் 70 சதவீத தனிநபர்கள், அந்த புதிய திட்டத்துக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் பரிசுத்தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் சட்டம், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுகள் வரி பிடித்தம் மூலம் ரூ.600 கோடி வருவாய் கிடைத்ததாக நிதின் குப்தா கூறினார்.

    கிரிப்டோகரன்சி எனப்படும் ஆன்லைன் பணத்தின் வர்த்தகம் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு நிதிஆண்டில் இதுவரை ரூ.105 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் பரிசுத்தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் சட்டம், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுகள் வரி பிடித்தம் மூலம் ரூ.600 கோடி வருவாய் கிடைத்ததாக நிதின் குப்தா கூறினார்.

    கிரிப்டோகரன்சி எனப்படும் ஆன்லைன் பணத்தின் வர்த்தகம் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு நிதிஆண்டில் இதுவரை ரூ.105 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    • சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.

    ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.

    • ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை நடக்கிறது.
    • இத்தகவலை செக்கானூரணி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரீ–சியன், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப் பபடுத்துதல் போன்ற இரண்டு வருட தொழிற் பிரிவுகளுக்கும், வெல்டர், உலோகத்தகடு வேலையாள் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட தொழிற்பி–ரிவுகளில் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு சேர விருப்பம் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (13.07.2023) முதல் செக்கா–னூரணி அரசு தொழிற்ப–யிற்சி நிலையத்திற்கு நேரடி–யாக வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து கொள் ளலாம்.

    மேலும், இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாண–வர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை–யில்லா மிதிவண்டி, சீருடை–கள், காலணி, வரைபடக்க–ருவிகள், புத்தகங்கள் வழங் கப்படும்.

    மேலும் பயிற்சியா–ளர்க–ளுக்கு மாதம் ரூ.750 உத–வித்தொகை யும், பயிற்சி முடித்த மாணவ ர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு–களில் 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    கூடுதல் விபரங்க ளுக்கு 04549-287224, 96260 67302, 98409 47460, 95669 03149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். இத்த கவலை செக்கானூ ரணி அரசி னர் தொழி ற்ப யிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரி–வித்து ள்ளார்.

    • தி.மு.க. தகவல் தொழில் நுட்ப உறுப்பினர்களுக்கு நேர்காணல் நடந்தது.
    • மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கு புதிய நிர்வாகிகளுக்கான நேர்கா ணல் திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் நேர்காணல் நடத்தினார். இதில் திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி கட்சியில் முக்கிய அணியாக உள்ளது. இந்த பிரிவு தொடங்கப்பட்டது திருமங்கலத்தில் தான். மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள். ஆனால் நாம் பதிலுக்கு கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.

    இதில் தகவல் தொழில் நுட்ப மாவட்ட அமைப்பா ளர் ஜெயசந்திரன், துணை அமைப்பாளர்கள் பாலகாமு, கார்த்தி, சூரியா, மகளிர் துணை அமைப்பாளர் தவமணி மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, வழக்கறிஞரணி அமைப் பாளர் தங்கேஸ்வரன், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சத்தியமங்கலம்- கடம்பூர் ஆசனூர் போன்ற மலை கிராமங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் குட்டைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    வழக்கம்போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது. மேலும் சேறும் சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர். பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தை களை குடை பிடித்தப்படிய பள்ளிக்கு அழைத்து சென்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கோபி -குண்டேரி பள்ளம் தாளவாடி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    • திருமணமான 4-வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குட்டிமணியகாரனூரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகன் சங்கர் (32). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு கடந்த 13.3.22 அன்று திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி (27) என்பருடன் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி திருமணம் முடிந்து பிரியதர்ஷினியின் வீட்டுக்கு திருச்சி சென்றனர். இதையடுத்து பிரிய தர்ஷினி மீண்டும் கணவ னுடன் கொடுமுடி வர மறுத்து விட்டார். திருமணமாகி 4 நாளில் மனைவி பிரிந்து சென்றதால் சங்கர் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சங்கரின் தந்தை செல்வராஜ் குடும்ப த்துடன் சென்று விட்டார். வீட்டில் சங்கர் தனியாக இருந்தார்.

    வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது சங்கர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சங்கரை வீடு முழுவதும் தேடி பார்த்தனர்.

    தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சங்கர் பேனில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னட நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. #KannadaStar #Producers #IT
    பெங்களூரு:

    கன்னட நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. சிவராஜ் குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

    நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சோதனையின்போது வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3-ந் தேதி சோதனை நடத்தினர். திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வரு மானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கணக்கில் காட்டப்படாத 25.3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.85 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.11 கோடி. மேலும் ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அவருக்கு வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் 3 பேருக்கும் வருமானவரித் துறை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கி கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசுக்கு கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சார்பில் வருமானவரித் துறைக்கு விளக்கக்கடிதம் அனுப்பப்பட்டது.

    கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வருமானவரித் துறையினர் புகார் மனு தாக்கல் செய்தனர்.

    குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரியும், இதுதொடர்பான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை நாளைக்குள்(14-ந் தேதி) மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    ×