என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "producer"
- பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெஹ்ரான்:
ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.
இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் இளம் நடிகை பட வாய்ப்பு தேடி அலைந்தாராம். அப்போது தயாரிப்பாளர் ஒருவரை அணுகிய நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒரு நாள் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டீசன் போட்டாராம். இதை கேட்ட நடிகை எதுனாலும் என் மேனேஜரிடம் கூறுங்கள் என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால், அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து நடிகையை தொல்லை செய்யவே நடிகை அந்த படத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம்.
அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை அணுகினார்களாம். ஆனால் நடிகை மறுத்ததால் கடுப்பான தயாரிப்பாளர் இனி நடிகையை எந்த படத்திலும் நடிக்க வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.
ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.
நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.
முக்கிய இயக்குனர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபலமானாராம். தொடர்ந்து படங்களில் நடித்தவருக்கு சில நாட்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் நடிகை கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம். கவர்ச்சியில் மட்டும் இறங்கினால் போதாது அதற்கான வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்த நடிகை தன் புகைப்படங்களை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தாராம்.
தயாரிப்பாளர்களும் நடிகையின் தொல்லை தாங்காமல் அவரை பல மணிநேரம் காக்க வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், முயற்சியை கைவிடாத நடிகை விடாது கருப்பு போன்று தயாரிப்பாளர்களை பின் தொடர ஆரம்பித்தாராம். இதனால் பயந்து போன தயாரிப்பாளர்கள் நடிகையை கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.
- சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர்.
சத்தியமங்கலம்:
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர். தமிழில் பன்-டீ, நீ என் பூஜா லட்சுமி மற்றும் ஏராளமான மலையாள படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கர்நாடகா படம் சம்பந்தமான வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்த கிருஷ்ணபிரசாந்தை ஒரு ஆம்னி வேனில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த கரிகாலன், சிவசக்தி, கார்த்திகேயன் ஆகிய கொண்ட கும்பல் கடத்தி கொண்டு வந்தனர்.
அப்போது ஈரோடு கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வடக்கு பேட்டை என்ற இடத்தில் மடக்கி பிடித்து சினிமா தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்தை அந்த கும்பல் இடமிருந்து மீட்டனர்.
இதனையடுத்து தயாரிப்பாளரை கடத்திய கரிகாலன், சிவசக்தி கார்த்திகேயனுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த தயா என்கிற கரிகாலன்(45) என்பவருடன் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்துக்கு கடந்த வருடம் முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது கிருஷ்ண பிரசாந்தியிடம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சினிமா படப்பிடிப்புக்கு உகந்த இடமாக உள்ளது என்றும், நீங்கள் வந்து பாருங்கள் என்று கரிகாலன் கூறியுள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ண பிரசாத் சத்தியமங்கலத்துக்கு வந்து சினிமா சம்பந்தமான லொகேஷன் பார்த்து உள்ளார். அப்போது கரிகாலன் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி ஆகியோர் தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாந்தை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
அப்போது கிருஷ்ண பிரசாந்த் உங்கள் 3 பேரையும் நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று அவரிகளிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் ரூ.2.50 லட்சம் வரை தயாரிப்பாளருக்கு செலவு செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரசாந்த் கூறியவாறு அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. மாறாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி அவர்களுக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த அருண் என்பவரை கிருஷ்ண பிரசாந்திடம் நன்கு பழக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா பட வேலை விஷயமாக கிருஷ்ணபிரசாந்த் கிருஷ்ணகிரி வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கடத்த திட்டம் போட்ட கரிகாலன் கும்பல் அருணை அனுப்பி வைத்து பேச வைத்துள்ளனர்.
நேற்று மாலை அருண், கிருஷ்ண பிரசாந்திடம் என்னிடம் நல்ல கதை உள்ளது உங்களிடம் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை யடுத்து இருவரும் கதை சம்பந்தமாக பேசி நடந்து கொண்டிருந்தனர். அப்போது வேனில் வந்த கரிகாலன், கார்த்திகேயன் சிவசக்தி ஆகியோர் கிருஷ்ணபிரசாத்தை கடத்தி கொண்டு சத்தியமங்கலம் வந்த போது நாங்கள் பிடித்துவிட்டோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனையடுத்து சத்திய மங்கலம் போலீசார் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர்.
அங்கு தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்திடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். பின்னர் கடத்தல் கும்பல் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் கிருஷ்ணகிரி போலீசார் சத்தியமங்கலம் வந்தனர்.
அவர்களிடம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி போலீசார் அந்த கடத்தல் கும்பலை விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
- போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
மும்பை:
மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.
கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
- சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், 36 ஆதி திராவிடர்களுக்கும், 4 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டு றவு பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப் பட்டுள்ளது.
இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கறவை மாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com, https://fast.tahdco.com, ://fast.tahdco.com, https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர்கள் உள்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. சிவராஜ் குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சோதனையின்போது வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகின. இது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3-ந் தேதி சோதனை நடத்தினர். திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வரு மானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத 25.3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.85 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.11 கோடி. மேலும் ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்