என் மலர்
நீங்கள் தேடியது "Producers Council"
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப். 22) நடைபெற்றது.
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.
இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர்.
வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட GKM தமிழ்குமரன், 788 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
- விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், "நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்" என்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், "அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
- VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும்.
- டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஃபெப்சி அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மலையாள சினிமா துறை போல VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டினார். அவர் பேசியதாவது:-
‘‘இந்த அரங்குக்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். 1994-ம் ஆண்டு எனக்கு இந்த அரங்கில் தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்போது வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கின்றன.
நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதய குரலில் இருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டுகிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர்.
அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதேபோல் மாணவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நீரோடைகள் செல்லும் இடங்களைப் பசுமையாக்குவது போல மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது.

நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்’’
இவ்வாறு கூறிவிட்டு தன் முன் இருந்த ஆர்மோனிய பெட்டி மீது சத்தியம் செய்தார்.
துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், “பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க போகிறோம். பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தில் இருக்கை அமைக்க அனுமதி வேண்டும்.
இந்த இருக்கையின் மூலம் இசைத் துறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார். இதனை இளையராஜா ஏற்றுக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தருவதாக கூறினார். #Ilayaraja75 #ProducerCouncil #Vishal






