என் மலர்
நீங்கள் தேடியது "எல்கே சுதீஷ்"
- நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார்.
- தே.மு.தி.க மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார். NDA கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்றதால் NDA கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுகிறதா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுதீஷிடம், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுதீஷ், நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க. நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் உள்ளது. அதை தொடர்ந்து, சமீப காலமாக தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க மாநாட்டில் அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தே.மு.தி.க. நீண்ட இழுபறிக்கு பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது.
- தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள்.
- பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க.
ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன்.

அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப்பெண்ணாக இருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க. நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக கூறினார்.
- தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
- மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம்.
தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம். இந்த பிரசாரமானது போலீசாரின் வழிகாட்டுதல்களோடு மக்களிடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும். இதற்காக கட்சி தரப்பில் இருந்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு போலீசாருக்கு முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.
எனவே தே.மு.தி.க.வின் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கி, பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. அப்போது தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டு தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்தார்.
ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க. கூறியது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது முழுக்க முழுக்க உண்மை.
அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால்தான், 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
- இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல.
ஈரோடு:
தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
இதேபோல் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இங்கு உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் வடமாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப்போகிறார்கள்.
இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல. அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது.
- தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏற்கனவே இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை எதையும் அவர் நிறைவேற்றவில்லை. அதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும் முதியவர்.
இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள். ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
- பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சென்னை:
சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது.
இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீசின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.
- கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில்,
வருகிற 28-ந்தேதி எங்கள் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளோம்.
இந்த நிகழ்வுக்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்.
எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.
நினைவு தினம் அன்று காலை 8.30 மணிக்கு தேமுதிக அனைத்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மவுன ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
போலீசார் அனுமதி கிடைத்தவுடன் 1 கி.மீ. மவுன ஊர்வலமாக நடந்து தலைமைக்கழகம் சென்று கேப்டன் ஆலயத்திற்கு சென்று அடைவோம்.
நினைவு தினம் அன்று வரும் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். நலத்திட்ட உதவிகள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும்.
கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு. மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் 'கேப்டன் முதலாம் ஆண்டு குரு பூஜை' என்று பெயர் வைக்கப்பட்டது.
கேப்டன் நினைவிடத்திற்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஒரு வருடமாக தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் பேர் வருகிறார்கள். பண்டிகை தினங்களில் 10 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். கோவில் போல் ஆகி விட்டது.
அதனால் தேமுதிக சார்பில் குரு பூஜையாக ஆண்டாண்டு செய்வோம் என்று அவர் கூறினார்.
- விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
- முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.
இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகாலை முதலே கோயம்பேட்டில் குவிந்தனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேரணிக்கு அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி மனு அளித்திருந்தும் நேற்று மாலை 5 மணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
முன்பே அனுமதி மறுத்திருந்தால் கோர்ட்டை அணுகி அனுமதி பெற்றிருப்போம். ஆனால் நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி தரப்படுமென நம்புகிறோம் என்று கூறினார்.






