என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Empuran"

    • கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது
    • படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் 'எம்புரான்' திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

    இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.

    இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது. 

    • இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
    • ல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    'எம்புரான்' படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எம்புரான்' கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    படம் வெளியானதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் சில காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிந்தார். பிருத்விராஜை தேசவிரோதி என ஆர்எஸ்எஸ் பத்திரிகை விமர்சித்தது.

    இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எம்புரான் பட சர்ச்சைக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறையினர், இந்த விசாரணை முழுக்க அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான மட்டுமே என தெரிவித்தனர்.

    • முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி.
    • நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

    எம்புரான் படத்தில் இடம்பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர், எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியாகி எதிர்ப்பு கிளம்பிய பிறகு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.

    எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார்.

    அதற்கு, நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

    மேலும் அவர்," அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும், கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம்" என்றார்.

    • எம்புரான் திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.
    • இப்படத்திற்கு தடைவிதிக்க கோரி பா.ஜ.க. நிர்வாகி விஜேஷ் கேரள ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்தப் படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.

    இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக எதிர்ப்பு எழுந்தது.

    இதற்கிடையே, இந்தப் படத்தில் இந்திய ராணுவம் குறித்தும் குஜராத் கலவரம் குறித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் நிர்வாகி வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்துடன் கொடுக்கப்படும் புகார் என கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், எம்புரான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.

    இந்நிலையில், எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த திருச்சூர் மாவட்ட நிர்வாகி விஜேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    • அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது
    • எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன.

    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியான படம் எம்புரான். கடந்த 2019 இல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் இது.

    படம் வெளியாதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் 17 காட்சிகள் வரை நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

    இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் வசைமாரி பொலிந்து வருகின்றன.

    ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை ஒன்று பிருத்விராஜை தேச விரோதி என்றும் இந்து விரோதி என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

    அந்த கட்டுரையில், பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், இது எப்போது தெரியவந்தது என்றால். தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதனை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காண்பிக்கும் விதமாக 'லட்சத் தீவுகளைக் காப்போம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

    சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.

    எம்புரான் படத்தின் தொடக்கத்தில், காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் பிருத்விராஜை விமர்சித்து பாஜக இளைஞர் அமைப்பான ''பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' மாநில பொதுச் செயலாளர் கணேஷ் தனது பேஸ்புக் பதிவில்,"நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி விசாரிக்கவேண்டும். ஆடு ஜீவிதம் படத்திற்கு பின், அவருடைய திரைப்படங்கள் தேசவிரோத கருத்துகளையே பரப்பி வருகின்றன.

    எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன. ஆடுஜீவிதம் படப்பிடிப்பின்போது அவர் ஜோர்டன் நாட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது.
    • இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    அதேநாளில் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரமின் 62-வது படமான 'வீர தீர சூரன்' வெளியாகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

     

     இந்த இரண்டு படங்களிலும் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய அவர், இரண்டு படங்களுமே சிறந்த படங்கள். ஹிட் அடிக்கும். எம்புரான் ஹிட்டகும்போது அது மோகன்லாலுக்கு ஒரு வெற்றி. வீரதீர சூரன் ஹிட்டாகும் அது விக்ரமூக்கு ஒரு வெற்றி. ஆனால் இரண்டு படங்களிலுமே உள்ளதால் எனக்கு ஒரே நாளில் இரண்டு ஹிட் படங்கள் என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில மாதங்களுக்கு முன் லிஜொ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இல்லை.

    இவர் அடுத்ததாக எம்புரான், பரோஸ், கண்ணப்பா,விருஷபா, மோகன் லால் 360 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    எம்புரான் திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்குகிறார். இதற்குமுன் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கினார். லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன் லால் நடிப்பில் எம்புரான் படத்தை இயக்கிவருகிறார் பிரித்விராஜ். இது லூசிபரின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×