எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு வசனம்- சட்டசபையில் விளக்கம்

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி.நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு வசனம்- சட்டசபையில் விளக்கம்
Published on

எம்புரான் படத்தில் இடம்பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர், எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியாகி எதிர்ப்பு கிளம்பிய பிறகு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார்.

அதற்கு, நான் அந்த படத்தை பார்க்கவில்லை என அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் அவர்," அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும், கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com