search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mullai periyar"

    • பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • முல்லைபெரியாற்றின் கரையில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் அணையி லிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 1414 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1904 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து 1655 கனஅடி வெளியேற்றப்படு கிறது. நீர் இருப்பு 4201 மி.கனஅடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக கூடலூர், கம்பம், உத்தம பாளையம், மார்க்கைய ன்கோட்டை, உப்பு க்கோட்டை, வீரபாண்டி, அரண்மனைப்புதூர் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

    இதனால் முல்லை பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி பொது ப்பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பா ட்ட வோ வே ண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜென ரேட்டர்களும் இயக்கப்பட்டு 151 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. வரத்து 1538 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2511 மி,கனஅடி, மஞ்சள்ஆறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 79.70 அடி,

    பெரியாறு 25.8, தேக்கடி 13.6, கூடலூர் 10.7, உத்தம பாளையம் 4.6, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

    முல்லை பெரியாறு நீர்மட்டத்தை அரசியல் சுயலாபத்திற்காக குறைக்க சொல்லும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மேலூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaperiyardam

    மதுரை:

    மேலூர் பகுதி முல்லை பெரியாறு, வைகை ஒரு போக பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    தற்போது கடும் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாறு, வைகை ஒருபோக பாசன பகுதியான, மேலூர் பகுதியில் 2 வருடமாக போதிய தண்ணீர் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளதால் மேலூர் ஒருபோக பாசனத்திற்காக போதிய தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து பெரிய போராட்டம் நடத்தப்படும், முல்லை பெரியாறு அணை பகுதியில், பல்வேறு தொழில் கமிட்டிகளும், உச்சநீதிமன்றமும் 142 அடி நீர் தேக்கலாம் என்று கூறிய பின்பும், அரசியல் சுயலாபத்திற்காக நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    கடந்தாண்டு தண்ணீர் கேட்டு 4 வழிச்சாலையை மறித்து தண்ணீருக்காக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #mullaperiyardam 

    ×