என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லை பெரியாற்றின் கரையில் நீராட பொதுமக்களுக்கு தடை
- பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- முல்லைபெரியாற்றின் கரையில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அணையி லிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 1414 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1904 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.
அணையிலிருந்து 1655 கனஅடி வெளியேற்றப்படு கிறது. நீர் இருப்பு 4201 மி.கனஅடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக கூடலூர், கம்பம், உத்தம பாளையம், மார்க்கைய ன்கோட்டை, உப்பு க்கோட்டை, வீரபாண்டி, அரண்மனைப்புதூர் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.
இதனால் முல்லை பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி பொது ப்பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பா ட்ட வோ வே ண்டாம் என தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜென ரேட்டர்களும் இயக்கப்பட்டு 151 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. வரத்து 1538 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2511 மி,கனஅடி, மஞ்சள்ஆறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 79.70 அடி,
பெரியாறு 25.8, தேக்கடி 13.6, கூடலூர் 10.7, உத்தம பாளையம் 4.6, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்