என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
    X

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாஹலின் மகன் சைதன்யா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹலும் அவரது மகனும் ஒரே இல்லத்தில் வசிக்கும் நிலையில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் பூபேஷ் பாஹலின் மகனை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அமலாக்கத்துறையால் தனது மகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹல் கூறுகையில்,

    காங்கிரஸ் அதானிக்கு எதிராகப் போராடுகிறது. எதிர்க்கட்சிகளின் வாயை அடக்க இந்த உத்தி பின்பற்றப்பட்டுள்ளது.

    அதானிக்கு எதிராக யாரும் குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்போது என் மகனைக் குறிவைக்கிறார்கள். நாங்கள் இதற்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம்.

    என் மகன் அவரது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் எனது பிறந்தநாளில் எனது ஆலோசகர் குறிவைக்கப்பட்டார் என்று கூறினார்.

    Next Story
    ×