search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் நிரவியில் தாய்-தந்தையை தாக்கிய மகன் கைது
    X

    காரைக்கால் நிரவியில் தாய்-தந்தையை தாக்கிய மகன் கைது

    • 5 மகன்களும், ஒரு மகளும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
    • ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமு த்துவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி பூசை மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் காளிமுத்து(வயது 85). இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உண்டு. 6 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காளிமுத்து தனது மனைவி இந்திராணியுடன் வசித்து வருகிறார். காளிமுத்துவின் 4-வமு மகன் கலியமூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக, தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன், தந்தையை கத்திரிகோலால் தாக்கி நிரவி போலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறை சென்றார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமுத்துவின் மனைவி இந்திராணியை கல்லால் அடித்து, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். தொடர்ந்து, மீண்டும் ஜாமினில் வெளியே வந்த கலியமூர்த்தி, காளிமு த்துவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சாப்பிட்டு க்கொண்டிருந்த தந்தை காளிமுத்துவை கையால் அடித்து கீழே தள்ளி, அருகில் கிடந்த கல்லால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, மனைவி இந்திராணி, தந்தையை பார்க்கவந்த மகள் அமுதா ஆகியோர் காளிமுத்துவை காப்பாற்றி, காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, காலிமுத்து நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கலியமூர்த்தியை மீண்டும் கைது செய்து, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×