search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa Assembly"

    கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்னர் உரிமை கோரிய நிலையில் புதிய முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. #GoanewCM #Goafloortest #PramodSawan
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.

    முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்காக அரசின் சார்பில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் நிலையில் எனக்கு வாழ்த்து கூறவும், மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கவும் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #GoanewCM #Goafloortest  #PramodSawan
    கோவா கடற்கரையில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GoaBeach
    பனாஜி:

    இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும்.

    கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தியர்களை தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிலும் கணிசமானவர்கள் கோவா கடற்கரைக்கு செல்ல தவறுவது இல்லை.

    கோவா கடலோரத்தில் மது அருந்துவது மிக பிரதானமான பொழுது போக்காக உள்ளது. சுங்கவரி குறைப்பு காரணமாக கோவா கடற்கரையில் மிக குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதும் இதற்கு உதவுவதாக உள்ளது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவா கடலோரத்தில் சட்டம்- ஒழுங்கு அதிக அளவில் சீர் குலைந்து வருகிறது. கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கேயே அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.


    இதையடுத்து கோவா கடலோர சுற்றுலா பயணிகளை நெறிப்படுத்த சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா மாநில சட்டசபை கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவா கடலோரத்தில் மது குடித்து விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து 3 மாதம் வரை சிறையில் அடைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    கோவா கடலோரத்தில் மட்டுமின்றி பொது இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  #GoaBeach
    பார்மலின் கலந்த மீன்கள் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இன்றும் கோவா சட்டசபை முடங்கியது. #GoaAssembly #fishissue
    பனாஜி:

    மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. கோவாவின் உணவு மற்றும் மருந்து கழகம், பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்ற ரசாயனம் உள்ளது என உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து கோவா மாநில அரசு ஜூலை இறுதி வரை வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. 

    இந்த விவகாரம் கோவா மாநில சட்டசபையில் எதிரொலித்தது. நேற்று இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில் இன்றும் பார்மலின் மீன் விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்டது. காலையில் சட்டசபை கூடியதும் பார்மலின் மீன்கள் தொடர்பாக  விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சபாநாயகர் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #GoaAssembly #fishissue
    ×