search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "formalin"

    பார்மலின் கலந்த மீன்கள் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இன்றும் கோவா சட்டசபை முடங்கியது. #GoaAssembly #fishissue
    பனாஜி:

    மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. கோவாவின் உணவு மற்றும் மருந்து கழகம், பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்ற ரசாயனம் உள்ளது என உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து கோவா மாநில அரசு ஜூலை இறுதி வரை வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. 

    இந்த விவகாரம் கோவா மாநில சட்டசபையில் எதிரொலித்தது. நேற்று இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில் இன்றும் பார்மலின் மீன் விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்டது. காலையில் சட்டசபை கூடியதும் பார்மலின் மீன்கள் தொடர்பாக  விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சபாநாயகர் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #GoaAssembly #fishissue
    மீன்களை பதப்படுத்த பார்மலின் என்ற வேதிப் பொருட்களை பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்ததையடுத்து கோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை விதித்து அம்மாநில முதல்- மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். #ManoharParrikar
    பனாஜி:

    மீன்களை பதப்படுத்த பார்மலின் என்ற வேதிப் பொருட்களை பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

    மருத்துவமனை பிணவறையில் உடல்கள் அழுகி போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பார்மலினை மீன் பதப்படுத்த பயன்படுத்துவதால் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    கோவா மாநிலத்திலும் இந்த சர்ச்சை எழுந்தது. இதைதொடர்ந்து அந்த மாநிலத்தில் 15 நாட்களுக்கு மீன் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோவாவிற்கு விற்பனைக்கு செல்லும் மீன்களில் பார்மலின் எனும் ரசாயன திரவத்தால் பாதுகாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 31-ந்தேதி வரை வெளி மாநில மீன்களுக்கு தடை விதித்து மாநில முதல்- மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.



    இது தொடர்பாக மேலும் அவர் கூறும் போது ஆகஸ்டு 1-ந்தேதி பிறகு மீன் விற்பனை இயல்பாக இருக்கும் இந்த தடையால் கோவாவில் மீன் தட்டுப்பாடு பிரச்சினை எதுவும் வராது என்றார். #ManoharParrikar
    மீன்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் எனும் வேதிப்பொருள் தூவப்படுவதாக புகார் எழுந்த நிலையில், சென்னை மீன் மார்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தற்போது கேரளாவில் கடலில் மீன்பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மீன்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. 

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களில் பிரேதத்தை பதப்படுத்தி வைக்க உதவும் ‘பார்மலின்’ என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அபாயம் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மீன்களை தங்களது மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு கேரள அரசு தடை விதித்தது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அமரவிளை சோதனைச் சாவடி, நெல்லை மாவட்டம் வழியாகச் செல்லும் ஆரியங்காவு சோதனைச் சாவடி ஆகியவற்றில் 50 ஆயிரம் கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் இதுவரை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்ற ஆய்வை சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை சந்தை ஆகியவற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டனர். இங்கிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அதிக அளவில் மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பழவேற்காடு, நீலாங்கரை உள்பட பல்வேறு முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு இருப்பது மீன் உணவு சாப்பிடுவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    ×