search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "herbal drink"

    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.
    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

    * வயிற்று பிடிப்பு, உப்பிசம், காற்று, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏதோ தவறான உணவினை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகின்றன.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி இவை இருக்கும்.

    * 1-8 மணி நேரம், 12-72 மணி நேரம் சென்றும் கூட அறிகுறிகள் வெளிப்படலாம்.

    * ஜூரம் இருக்கலாம்.

    * எதிலும் கவனம் செலுத்த முடியாது.

    * உடலில் நீர் வற்றுதல்

    போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுதே உடனடி கவனம் செலுத்தினால் பாதிப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

    * கைகளை சாப்பிடும் முன்பும், பின்பும் சுத்தமாகக் கழுவுங்கள்.

    * வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.

    * வீடு, குறிப்பாக சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருங்கள்.

    * முறையாக சமைக்காத அசைவ உணவு குடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை.

    * மீந்து போன அசைவ உணவுகளில் அதிக கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.

    * காய்ச்சாத பச்சை பாலினை பயன்படுத்த வேண்டாம்.

    * பச்சை முட்டை, பச்சை மீன் இவை குடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    * நன்கு கழுவப்படாத பழங்கள், காய்கறிகள் ஆபத்தானதே.

    * முளை கட்டிய பயிரினை கூட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

    வாழைப்பழம் என்றவுடன் பல வகை வாழைப்பழங்கள் வகையினைப் பற்றி நாம் நினைப்போம். உண்ணும் பழக்கம் உள்ளது. செவ்வாழைப் பற்றி அரிந்து கொண்டால் நாம் செவ்வாழையினையும் அடிக்கடி உண்ண ஆரம்பிப்போம்.

    * செவ்வாழை நிறைந்த நார் சத்து கொண்டது. மலக்சிக்கல் செரிமான கோளாறு, வயிற்றில் காற்று இவற்றினை நீக்கும் தன்மை கொண்டது. இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு இவைகளை தவிர்க்கும் தன்மை கொண்டது.

    * சிறு நீரக கற்கள் உருவாவதைத் தவிர்க்கும்.

    * எலும்பு ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * அதிக கலோரி சத்து இல்லாததால் எடை குறைப்பிற்கு உதவும்.

    * வைட்டமின்கள் அதிகம் கொண்டதால் ரத்த விருத்தி, சிகப்பு அணுக்கள், ஹீமோ குளோபின் இவற்றுக்கு பெரிதும் உதவும்.

    * உடனடி சக்தி அளிக்க வல்லது.

    * சிகரெட் பழக்கத்தினை நிறுத்தும் பொழுது செவ்வாழை எடுத்துக் கொள்வது உடல், மன நலத்தினை பாதுகாக்கும்.

    * நெஞ்சு எரிச்சல் உடையவர்கள் செவ்வாழையினை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

    * மூல நோய்க்கும் சிறந்தது.

    * ஸ்ட்ரெஸ் பாதிப்பு உடையவர்கள் செவ்வாழை எடுத்துக்கொள்ள நல்ல நிவர்த்தி கிடைக்கும்.

    * வயிற்றுப் புண் நீக்கும்.

    * கண் பார்வைக்கு நல்லது.
    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

    திங்கள்-அருகம்புல்

    ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

    அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

    செவ்வாய்-சீரகம்

    இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

    புதன்-செம்பருத்தி

    இரண்டு செம்பருத்தி பூ (மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். ரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

    வியாழன்-கொத்துமல்லி

    ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

    வெள்ளி-கேரட்

    ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக கேரட் ஜூஸ் நல்ல மருந்து.

    சனி-கரும்பு சாறு

    கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

    ஞாயிறு-இளநீர்

    ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

    உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

    குறிப்பு:- நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை

    ×