search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் அருகே கள்ள சாராயம் கடத்திய இருவர் கைது
    X

    திருமருகல் அருகே கள்ள சாராயம் கடத்திய இருவர் கைது

    • 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒக்கூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் சதீஷ்குமார் (வயது 26) ஒக்கூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் பிரபு (வயது 28) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    திட்டச்சேரியில் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்ட–வர்களையும் சாராயம் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.

    Next Story
    ×