மது விற்ற 3 பேர் கைது

5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்ஜெயிலில் அடைத்தனர்
மது விற்ற 3 பேர் கைது
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவரை பிடித்து 30 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

அச்சமங்கலம் கீழ் தெரு பகுதியில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரவி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ளசாரத்தையும் பறிமுதல் செய்தனர்.

கள்ள சாராயம், மது விற்ற இதே போன்று பழைய ஜோலார்பேட்டை, கடை தெரு பகுதியில் திலீப் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 58 லிட்டர் கள்ள சாராயத்தையும் 30 மது பாட்டில்கள் என மொத்தம் 100 மது பாட்டில்களையும் 68 லிட்டர் கள்ளசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com