என் மலர்
உலகம்

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்...
- தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
- போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யபட்டது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதெல்லாம் இத்தினத்தில் வலியுறுத்தப்படும்.






