என் மலர்
நீங்கள் தேடியது "வீரலட்சுமி"
- தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, "ஒரு நடிகை என்னிடம் கூறிய அந்தரங்க தகவல்களை எல்லாம் நான் கூறினால் சீமான் எவ்வளவு பெரிய காம கொடூரன் என்று சொல்லி அவர் பின்னல் நிற்கும் பெண்களே காரி துப்புவார்கள். நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியுள்ளார்.
சீமான் குறித்த விபரங்களை வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து துரத்துவர். சீமானுக்கு பெண்கள் உரிமைக்காக போராட எந்த உரிமையும் இல்லை. வதந்திகள் பரப்புவதை சீமான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
- ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.
நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார். இரு சமூகங்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவுவாக பேசி தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
நடிகை கஸ்தூரி சத்தியராஜ் படம் அமைதிப்படையில் தாயம்மாவாக நடித்தபோது இதுபோன்ற கருத்துக்களை பேசி இருந்தால் ஒரு பொண்ணு பேசுது என்று காது கொடுத்து கேட்டு இருப்பார்கள்.
நீ இப்போ ஆயம்மாவாக ஆனபின்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்களும் தமிழர்களும், சகோதர சகோதரிகளாக, ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.
ஈழத்தில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்தபோதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டபோதும், குழந்தைகள் கொன்று குவித்தபோதும் நடிகை கஸ்தூரி என்ன செய்துகொண்டிருந்தார்.
உரிமைகளுக்காக போராடாத நீ தமிழச்சியா?
கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டபோது, அண்டை மாநிலத்தவர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்தபோது இந்த மண்ணில் தமிழர்களாகிய நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கோடு தெலுங்கு பேசும் மக்களும் களத்தில் நின்று போராடி சிறைக்கு போகிறார்கள்.
சீமான் அண்ணன் தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதற்காக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சீமான் கருத்து போல் தான் நடிகை கஸ்தூரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
சீமான் கருத்தும் நடிகை கஸ்தூரி கருத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.
சீமானுக்கு கஸ்தூரி கிளாஸ்மேட்டா (Classmate) இல்லை glassmate...
சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.
பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.
நடிகை கஸ்தூரி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
- சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா ?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார்.
இது இருவரிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியது. அவ்வபோது வீரலட்சுமியும் வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.
இந்நிலையில், கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே.. ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழிங்கினமாக பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.
சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா? ஆனால், ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளுவர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் இது. இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ம் ஆண்டு தை மாதத்தில் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது.
இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
- முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்க டைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள்.
அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள்.
இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள், தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும்,
முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
பாதங்களில் தேவர்கள அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன.
ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் விரும்பியதை கொடுக்கும் கற்பக விருட்சம், இவளின் செல்வத்தை காவல் புரியும் விநதிய வாசினி எனும் துர்கை, குளிர்ந்த இனபம் நல்கும் சந்திரன் மற்றும் மணமாலையை ஏந்திய தேவப் பணிப் பெண்ணான அப்சரஸ் நிற்கின்றாள்.
இந்த மணமாலையை சூட்டித்தான் லட்சுமி பின்னாளில் விஷ்ணுவை மணந்தாள்.
பெண்களுக்கு விரைவில் திருமணம் நிறைவேற இவளே, தனது பார்வையால் அனுகிரக்கிறாள்.
இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, வலப்புறத்தே நினைத்த மாத்திரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை விளங்குகின்றன.
இவளின் திருவடியை வழிபடுவோர், விரைந்து செயல்படும் ஆற்றல் உறுதி பெறலாம்.
- இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
- நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.
கோலாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடியவள் வீரலட்சுமி.
இவள், சிம்மத்தின் மீது ஆரோகணித்து வில், வாள், அம்பு, கேடயம் ஏந்தி வருபவள் என்றும் நான்கு கரத்துடன் விளங்குபவள் என்றும் ஒரு தியானம் கூறுகிறது.
வீரத்தால் விளைவது வெற்றியாகும்.
வெற்றியை நல்கும் வீரலட்சுமி, வெற்றித் திருமகள், ஜெயலட்சுமி எனப்படுகிறாள்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் ஓம் க்ரோம் ப்ரோம் க்ரௌம் ஜ்ரௌம் ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா என்று கூறி
புஷ்பங்களை திருவிளக்கின் பாதத்தில் போட்டு பூஜிக்க வேண்டும்.
அல்லது லலிதா திரிசதீ நாமா வளியில் 61 முதல் 80 வரையிலான நாமாளவளிகளைச் சொல்லி
குங்குமத்தினாலோ, சிவப்பு புஷ்பங்களாலோ, மல்லிகையாலோ அர்ச்சனை செய்யலாம்.
நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.
வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, தை மாத மகா சங்கராந்தி, திருவோண நட்சத்திரம்,
நவராத்திரி காலங்களில் விசேஷமாக பூஜித்தல் நன்று.
இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
பெருவீரர்களும், இவளை உபாசிக்கும் வீரரிடம் சரணடைவர். நீதிமன்ற வழக்கிலும் வெறறியடையச் செய்பவள் இவளே.
- பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
- புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.
திருவள்ளூர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.
- குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம்
- வீரலட்சுமி என்பது யார்? என்மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு அளித்திருந்த புகார் அடிப்படையிலான வழக்கு, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்து, நேருக்குநேராக விசாரணை நடத்த வேண்டும். அப்படி என்றால் விசாரணைக்கு தயார் என்று சீமான் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, வீரலட்சுமி என்பவர் சீமான் மனைவி கயல்விழி மற்றும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்திருந்த தேன்மொழி ஆகியோரும் விசாரணைக்கு வர வேண்டும் என வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு விஜயலட்சுமி எதிர்ப்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமான் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம் என நினைக்கிறார்கள். தற்போது இரண்டு முறை சம்மன் அனுப்பிய காவல்துறை அப்போது என்ன செய்தது? எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு.
வீரலட்சுமி என்பது யார்? என்மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை. ஜூனியர் நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில்மென்ட் செய்ததாக கூறியுள்ளார். அந்த ஜூனியர் நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமிதான்.
என்னை ஒருமையில் பேசுகிறார்கள். ஜனநாயகவாதியாக இருப்பதுதான் எனக்கு பிரச்சனை. எனக்கு வேறு ஒரு முகம் இருக்கும். இந்த முகத்தையே பார்க்க முடியவில்லையே. அப்போது வேறு முகத்தை?
அதிகாரத்தில் இருப்பது யார்? வீரலட்சுமியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்?. எப்போது வந்தாலும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். ஊடகங்களை சந்திக்கலாம். சீமானை பற்றி பேசினால்...
சீமான் பானிபூரி விற்கிறவன் மாதிரி... நான் யார் தெரியுமா? நான் ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்த என் தலைவனை பார்த்து வந்தவன்.
எனக்கு உயிரும் என்றுதான், ...ம் ஒன்றுதான்.... எதற்கும் பயப்படமாட்டேன். ஜெயில்ல போடுவீர்கள். அப்புறம் வெளியில் விடுவீர்கள்தானே? அப்போது உங்களை விட்டுவிடுவேனா என்ன...
வீரலட்சுமி, விஜயலட்சுமி என இரண்டு லட்சுமியை ஏன் அனுப்பி கொண்டிருக்கிறீர்கள். எனது பிறப்பிலும், ரத்தத்திலும் வீரம் இருக்கிறது. நான் தலைவராக ஏற்றுக் கொண்டவர் வீரமே உருவமாக இருந்தவர். அவரது மகன் நான்... எனக்கு வீரமெல்லாம் இருக்கு. வேணாம். இருண்டு லட்சுமியையும் திரும்பப்பெறு.
என்னிடம் இல்லாதது பணம்தான். இரண்டு தனலட்சுமி, தான்யலட்சுமியை கொடு. 10 தனலட்சுமி, 10 தான்யலட்சுமியை அனுப்பி. சமாளிக்கிறேன்.
அவதூறால் அழிந்து போகிறவனா நானு....
நான் கேடுகெட்ட ரவுடிப்பையன். ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்கிறார்கள். இந்த பேனாவை தூக்க முடியுமா?. சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்... நான் ரொம்ப சீரியஸான ஆள். கட்சியாவது? ...ஆவது என வெட்டி எறிந்து போய்க்கொண்டே இருப்பேன்.
பெண்களுக்கு எதிராக அநீதி நடந்தபோது எங்கே போனார்கள். நாங்கள்தானே போராடினோம்.