search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadavul"

    • அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.
    • முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

    ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்க டைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள்.

    அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின.

    அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள்.

    இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.

    பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள், தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும்,

    முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

    பாதங்களில் தேவர்கள அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன.

    ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் விரும்பியதை கொடுக்கும் கற்பக விருட்சம், இவளின் செல்வத்தை காவல் புரியும் விநதிய வாசினி எனும் துர்கை, குளிர்ந்த இனபம் நல்கும் சந்திரன் மற்றும் மணமாலையை ஏந்திய தேவப் பணிப் பெண்ணான அப்சரஸ் நிற்கின்றாள்.

    இந்த மணமாலையை சூட்டித்தான் லட்சுமி பின்னாளில் விஷ்ணுவை மணந்தாள்.

    பெண்களுக்கு விரைவில் திருமணம் நிறைவேற இவளே, தனது பார்வையால் அனுகிரக்கிறாள்.

    இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, வலப்புறத்தே நினைத்த மாத்திரத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை விளங்குகின்றன.

    இவளின் திருவடியை வழிபடுவோர், விரைந்து செயல்படும் ஆற்றல் உறுதி பெறலாம்.

    • இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
    • நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

    கோலாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடியவள் வீரலட்சுமி.

    இவள், சிம்மத்தின் மீது ஆரோகணித்து வில், வாள், அம்பு, கேடயம் ஏந்தி வருபவள் என்றும் நான்கு கரத்துடன் விளங்குபவள் என்றும் ஒரு தியானம் கூறுகிறது.

    வீரத்தால் விளைவது வெற்றியாகும்.

    வெற்றியை நல்கும் வீரலட்சுமி, வெற்றித் திருமகள், ஜெயலட்சுமி எனப்படுகிறாள்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் ஓம் க்ரோம் ப்ரோம் க்ரௌம் ஜ்ரௌம் ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா என்று கூறி

    புஷ்பங்களை திருவிளக்கின் பாதத்தில் போட்டு பூஜிக்க வேண்டும்.

    அல்லது லலிதா திரிசதீ நாமா வளியில் 61 முதல் 80 வரையிலான நாமாளவளிகளைச் சொல்லி

    குங்குமத்தினாலோ, சிவப்பு புஷ்பங்களாலோ, மல்லிகையாலோ அர்ச்சனை செய்யலாம்.

    நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

    வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, தை மாத மகா சங்கராந்தி, திருவோண நட்சத்திரம்,

    நவராத்திரி காலங்களில் விசேஷமாக பூஜித்தல் நன்று.

    இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.

    பெருவீரர்களும், இவளை உபாசிக்கும் வீரரிடம் சரணடைவர். நீதிமன்ற வழக்கிலும் வெறறியடையச் செய்பவள் இவளே.

    • ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.
    • திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.

    பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய பல பொருட்களுடன் ஸ்ரீமகாலட்சுமியும் மூதேவியும் தோன்றினார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.

    அவ்வமயம் மூதேவி, மூத்தவளான தன் கலயாணத்துக்கு பின்னர்தான் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீமகாவிஷ்ணுவை மணக்கலாம் என்று திட்டவடடமாகக் கூறி விட்டாள்.

    மூதேவியை மணந்து கொள்ள யாருமே முன் வராதபோது, உத்தாலகர் என்ற ரிஷி, தானாகவே முன் வந்து,

    தன் தவ வலிமையால் மூதேவியின் தீய செயல்கள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாகக் கூறி, மூதேவியை மணந்து கொண்டார்.

    திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.

    பின்புதான் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீமகாலட்சுமிக்கும் திருமணம் நடந்ததாம்.

    அந்த நாளே தீபாவளித் திருநாளாகும்.

    • மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.
    • அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளார்கள்.

    மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும்.

    அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம்.

    மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன்.

    அவருக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார்.

    ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.

    அந்த வகையில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.

    அன்றைய தினம் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள்.

    அன்று தான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றி தரும் வெற்றிலை மாலை
    • ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    வெற்றி தரும் வெற்றிலை மாலை

    வெற்றியை யார்தான் விரும்பமாட்டார்கள், ஆனால் வெற்றி தேவதையின் அருள்பார்வை நம்மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.

    அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.

    அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களை சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.

    அத்துடன்,பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகக் கட்டி அனுமனுக்கு போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது..

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒருபாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்றுபாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.

    அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.

    சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    ×