என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswmai"

    • நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
    • இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,

    "மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,

    நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,

    இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,

    மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

    தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார். 



    • பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    கோவை:

    கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். விமான நிலையம் வந்து இறங்கும் பிரதமரை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். தொடர்ந்து விமான நிலையத்திலேயே அவர் பிரதமர் மோடியுடன் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பிரதமரை சந்திக்கும்போது கூட்டணி விவகாரம் மற்றும் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார் என தெரிகிறது. இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    • தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
    • பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்!

    ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.

    கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. "என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

    இதே போல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

    திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார். 

    • நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

    இதன்படி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு நிர்வாகிகளோடு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்றும், இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    39 மாவட்டங்களிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவே விரைவாக கொண்டு சேர்க்க முடியும் என்பதால் அதனை செயல்படுத்துவதில் அ.தி.மு.க.வினர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்கிற வகையிலேயே 2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் முதலமைச்சராக இருந்தபோதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் சாதனை பட்டியலை தயாரித்து அதனை சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டு சேர்த்து மக்களின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது பற்றியும் ஐ.டி. பிரிவினரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டு உள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் நாகரீகமான கருத்துக்களை பதிவிட்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணிகளை சேர்ந்தவர்கள் முழுமையாக களம் இறங்கி செயல்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.

    இந்த 2 நாட்கள் கூட்டத்திற்கு பிறகு நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

    ஐ.டி. பிரிவு நிர்வாகிகளோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திரட்டி வைத்துள்ள தகவல்களை வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.

    இந்த கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக இருந்து வரும் மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி ஐ.டி. பிரிவினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ள உள்ள பிரசாரங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இதை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?
    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.

    ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.

    திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை,

    ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,

    ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?

    ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.

    தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

    அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

    இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?

    அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.

    விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! என்று கூறியுள்ளார். 



    • நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
    • 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?

    சென்னை :

    தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    * இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது கிடையாது.

    * கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்?

    * நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?

    * 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?

    * ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய 1.5 மணிநேரம் ஆகும். ஆனால் 8 மணி நேரத்தில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்தது எப்படி?

    * அமைச்சர்கள் பதில் அளிக்குமாறு முதலமைச்சரே கூறிய போதிலும் சபாநாயகர் தடுப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். 

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.
    • அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார்.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.

    * கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை.

    * டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை.

    * அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    * செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது என்றார்.

    • ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது.
    • கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    'தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சங்கத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை-தூத்துக்குடி சாலை, விமான நிலைய விரிவாக்கம், தென் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு அரசியில் கட்சியினரும் இங்கு வந்துள்ளீர்கள். தொழிலும், அரசியலும் அப்பாற்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தற்போது படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது. அதற்கு நிதி, நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் தொழிற்சாலை வரும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.

    அதேபோல் கோவில் நகரமான இங்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க. அரசு முழு நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு குறிப்பாக நிலம் தேவை. தற்போது நிலத்தை கையகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் விவசாயிகள் முன் வந்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே வெளிமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலில் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். அம்மா ஆட்சியிலும், எனது ஆட்சியிலும் எனது தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையினரின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.1300 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையில் 4 தடுப்பணைகள், ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், பாதாள சாக்கடை வசதிகள், குடிமராமத்து பணிகள், பறக்கும் பாலம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி, வளர்ச்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இங்கு தொழிற்துறையினர் கொடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கவனமுடன் பரிசலீத்து நடவடடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
    • தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோபி:

    அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.

    இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.

    ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.

    கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.

    மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
    • பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 22-ந்தேதி வருகைதர உள்ளார். நெல்லையில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது பற்றி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    கேள்வி:- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. பயப்படாது என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும், 'நாங்கள் ஈடி-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என்று கூறி இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:-அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய 2 அமைப்புகளும் தன்னிச்சையான அமைப்புகளாகும். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தங்களது வேலைகளை அந்த அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இதுபோன்ற சோதனைகளை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அதுபற்றி மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமானதாக இல்லை.

    தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.

    எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்தோடு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்படி மக்கள் ஆதரவுடன் அவரது பிரசார யாத்திரை எழுச்சி பெற்றிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளார். எனவே தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை அவரும், தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் விலகிச் சென்று தி.மு.க.வில் இணைந்திருப்பதால் அது கூட்டணியை பலவீனப்படுத்தி விடாதா?

    பதில்:-2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வது வழக்கமானது தான். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த போது தி.மு.க.வில் இருந்து விலகி பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர்.

    இப்போது தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் இணைவதற்காக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது போன்று யார்-யார் எங்களிடம் பேசுகிறார்கள், இணைப்பு விழா எப்போது நடைபெறும் என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக தி.மு.க.வில் இருந்து பலர் வெளியில் வருவார்கள்.

    கேள்வி:-தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை கூறி இருக்கிறாரே?

    பதில்:-தி.மு.க. கூட்டணியில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இதுபோன்று மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணியில் இருந்து எங்கே வெளியேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர் உள்ளார். அவருக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான். பட்டியல் இன மக்களை பற்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை எதற்குமே திருமாவளவன் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார். இன்றைக்கு பட்டியல் இன மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் உள்ளன.

    நான் பட்டியல் இனத்தில் காலனியில் இருந்து வந்தவன். நான் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் நிலையை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி இருக்கிறேன். அதுபற்றியெல்லாம் திருமாவளவன் பேச மாட்டார்.

    எனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தை பொறுத்தவரையில் தகுதியான நபர்களுக்கு மாற்றுப் பணிகளையும் வழங்க வேண்டும். அவர்களை தூய்மை பணியாளர்களாக மட்டுமே எப்போதும் வைத்திருக்கக் கூடாது.

    உதாரணத்துக்கு ஓட்டுனர் வேலை தெரிந்தவராக தூய்மை பணியாளர் ஒருவர் இருந்தால் வாய்ப்பு வரும் போது அவருக்கு டிரைவர் பணியை வழங்கலாம். அதே நேரத்தில் கல்வியறிவு பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணிகளை வழங்கலாம்.

    கேள்வி:-ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறதே?

    பதில்:-ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரெயில்வே துறையிடம் எடுத்து கூறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
    • பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.

    கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

    உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

    ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?

    பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 



    • கடந்த தேர்தலின் போது செய்ய முடியாத சில திட்டங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.
    • அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து ஆதரவு கொடுத்தனர். இதை பார்க்கும் போது தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் என்பதில் தெளிவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    அது மட்டுமல்ல அந்த அரசியல் மாற்றத்தை அ.தி.மு.க.வால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். "காலத்தே பயிர் செய்" என்று சொல்வார்கள். நான் விவசாயி என்பதால் 8 மாதத்துக்கு முன்பே சரியான நேரத்தில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன்.

    இது அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும். தாமதமாகி விட்டால் 234 தொகுதிகளுக்கும் செல்ல இயலாது. எனவேதான் இப்போதே மக்களை சந்தித்து வருகிறேன்.

    கடந்த தேர்தலின் போது செய்ய முடியாத சில திட்டங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. நாங்கள் நிறைவேற்ற முடியாததை பொய்யான வாக்குறுதிகளாக சொல்ல மாட்டோம். இருக்கிற நிதியை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்போம்.

    தி.மு.க. தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக உயர்ந்து விடும். இதை எப்படி திருப்பி கொடுப்பது? திறமை இல்லாத அரசால்தான் தற்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    அதுமட்டுமல்ல கடந்த 50 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. போதை பழக்கம் இளைஞர்களிடம், மாணவர்களிடம் அதிகமாகி இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. மற்ற மாநிலங்களில் இருந்து ரவுடிகள் தமிழகத்துக்குள் வந்து உள்ளனர்.

    அவர்கள் போலீசுக்கு பயப்படாமல் குற்றங்களை செய்கிறார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ரவுடிகளை கண்டு போலீஸ்காரர்களே பயப்படும் நிலை உள்ளது. இதற்கு எல்லாம் நாங்கள் முடிவு கட்டுவோம்.

    சட்டசபை ஒவ்வொரு தடவை கூடும்போதும் போதைப் பொருள் பழக்கம் கிராமம் முதல் நகரம் வரை பரவி விட்டதை நான் சுட்டி காட்டி வருகிறேன். ஆனால் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.

    அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது. இதனால் தான் பா.ஜ.க. ஆட்சியில் பங்கு கேட்பதாக தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்கள். இதையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

    210 தொகுதிகளில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் எங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவை பார்த்து தான் இதை நான் சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

    பணத்தையும், ஆட்களையும் வைத்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. ஒருபோதும் அப்படி நடந்து கொள்ளாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம்.

    தி.மு.க.வை 2026-ம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்று முன்பு நான் கூறினேன். அதை பல கட்சிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன. நான் என்ன சொன்னேன் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

    நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்றுதான் கூறினேன்.

    கடந்த 50 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டப் பணிகளை அ.தி.மு.க. செய்து கொடுத்து உள்ளது. இதனால் மக்கள் மனதில் இடம் பிடித்து அ.தி.மு.க. தனித்துவத்துடன் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்கிறது. என்றாலும் அரசியலில் வலுவான கூட்டணியும், பணப்பலமும் உள்ள தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறேன்.

    அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்று நான் தெரிவித்ததை பல கட்சிகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. அந்த கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. எனவே வலுவான ஒரு கூட்டணி அமையும் என்று நம்புகிறேன்.

    அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றதை பல முறை நிரூபித்து இருக்கிறது. ஆனால் தி.மு.க. பணத்தை வீசி சில கட்சிகளை அடிமையாக வைத்து தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    ×