என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheran"

    • 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
    • அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் கடந்த 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

    படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலருக்கும் மோட்டிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

    இந்த நிலையில், 'ஆட்டோகிராப்' படம் வெளியாகி 7நாட்கள் ஆன நிலையில் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள செய்தியில், 21 வருடங்களுக்கு பின் வெளியானபோதும் கொண்டாடி படம் பார்த்து பாராட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி...

    சில புதிய படங்கள் மூன்று நாட்கள் திரையரங்கில் தொடர்வது கடினமாக இருக்கும் காலத்தில் மறு வெளியீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் ஓடியிருப்பது மகிழ்ச்சி... அதற்கு ஒத்துழைத்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார். 




    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் புதிய டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட உள்ளனர்.

    • படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார்.
    • இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



    பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.



    படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலரும் மோடிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்ததும். மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.




    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.

    இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் சேரன் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து சேரன் கூறுகையில்," பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு பைசன். நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
    • இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம்(P.O)' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது.

    'Tootu Madike' போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் 'Veerappan', 'Sooryavamsi', 'Vaanku' (தயாரிப்பு), 'Nalla Samayam' (விநியோகம்), 'Rudhiram' (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

    நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பன்முகத் தமிழ் நடிகரான யோகி பாபு, கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மேலும், சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூணார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண் மற்றும் மது ராவ் உள்ளிட்ட பலரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

    இத்திரைப்படம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், பம்பை மற்றும் எருமேலி போன்ற புகழ்பெற்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    வலுவான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படத்தின் கதை பேசுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையுடனும், ஆழமான உணர்வுபூர்வமான தொடர்புகளுடனும், இந்த படம் ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு அய்யப்பன் எழுதியுள்ளார். அருண் ராஜ் இசையமைக்க, வினோத் பாரதி ஒளிப்பதிவையும், பிகே படத்தொகுப்பையும் கையாளுகின்றனர். தொழில்நுட்பக் குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டை பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'சன்னிதானம்(P.O)' விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    தொழில்நுட்பக் குழுவினர்:

    வசனம் மற்றும் இயக்கம்: அமுத சாரதி

    கதை மற்றும் திரைக்கதை: அஜினு அய்யப்பன்

    தயாரிப்பாளர்கள்: மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான்

    தயாரிப்பு நிறுவனம்: சர்வத்தா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ்

    ஒளிப்பதிவு: வினோத் பாரதி

    இசை: அருண் ராஜ்

    படத்தொகுப்பு: பிகே

    கலை இயக்குநர்: விஜய் தென்னரசு

    இணை இயக்குநர்கள்: ஷாக்கி அசோக் & சுஜேஷ் அன்னி ஈப்பன்

    சண்டைப் பயிற்சி: மெட்ரோ மகேஷ்

    பாடலாசிரியர்: மோகன் ராஜன்

    நடன அமைப்பு: ஜாய் மதி

    ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்

    ஒப்பனை: சி. ஷிபுகுமார்

    தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்

    நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி

    இணை இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்

    உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா

    வடிவமைப்பாளர்: வி.எம். சிவகுமார்

    ஸ்டில்ஸ்: ரெனி மோன்

    மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
    • லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சேரன் இயக்கத்தில் உருவாகும் 'அய்யா' படத்தின் தலைப்பை வெளியிட்டு ராமதாஸிற்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.



    இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் இந்தப் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

    • டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. 

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.

    திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் மே 16 ஆம் தேதியாக இருந்தது. ஆனால் தற்பொழுது சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்று மலையாளத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த டிடெக்டிவ் உஜ்வாலன் மற்றும் ரஞ்சித் சஞ்சீவ் நடித்த யுனைடட் கிங்டம் ஆஃப் கேரளா மற்றும் அசாதி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. 

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ×