என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா ராஜேஷ்"

    • ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
    • சாம் பிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. டைட்டில் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'அண்டர் 18' (UNDER 18) என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த வேறு எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

    நடிகர் விக்ராந்த் LBW, மதராசி, மார்க் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியானது. அதனை தொடர்ந்து, கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்தரகாண்டா, ஓ.! சுகுமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 



    • சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை.
    • வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு, சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்தில் சமையல் பகுதிக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பில் பங்கேற்றோருக்கு தோசை சுட்டு பரிமாறினார்.

    தோசை, தோசை வேண்டுமா? வேண்டுமா? என கூவி, கூவி அழைத்து அனைவருக்கும் தனது கையால் சுட சுட சுட்டுக் கொடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை. கேட்க வா வேண்டும் மேடம். எனக்கு மேடம் எனக்கு என போட்டி போட்டு 'தோசை'யை சுவைத்து மகிழ்ந்தனர் படக்குழுவினர்.

    அப்போது எடுத்த வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    • இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன்.
    • என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனை.

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறிய வயது காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் அவர் கூறியதாவது:-

    நான் சினிமாவுக்கு வரும் முன், மிக சின்ன வயதில் நடந்த சம்பவம் இது. நான் எப்போதும் இதனை மறக்கவே மாட்டேன். போட்டோ ஷூட் என அழைத்தார். நான் என் சகோதரருடன் சென்றேன். அவரை வெளியே அமர சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார்.

    உள்ளாடைகளை கொடுத்து, இதனை அணிந்து கொள், உன் உடலை நான் பார்க்க வேண்டும் என சொன்னார். எனக்கு என்னவென்றே புரியவில்லை. நான் மிகவும் சின்ன பிள்ளை அப்போது.

    இங்கு எல்லாம் இப்படித்தான் நடக்குமோ என நான்கூட யோசிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்களும் இதை அணிந்ததும் எப்படி போட்டோ எடுக்கலாம் என பேச ஆரம்பித்தார்கள். இன்னும் 5 நிமிடங்கள் அவர்கள் என்னிடம் பேசி இருந்தால், ஒருவேளை நான் அதை அணிந்து கொண்டிருப்பேன்.

    ஆனால் ஏதோ தப்பாக நடக்கிறது என நான் உணர்ந்ததும், என் சகோதரனிடம் அனுமதி கேட்க வேண்டும் என சொல்லி, அந்த அறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதே போல அவர்கள் இன்னும் எத்தனை பெண்களுக்கு செய்திருப்பார்கள். என்னால் அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை. திரை உலகில் இயக்குநர் ஒருவர் நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததாக திட்டினார். திட்டியதால் பிரச்சனை இல்லை. என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனை. நான் என்ன தவறு செய்திருந்தாலும் பொதுவில் திட்டுவது சரியல்ல என்றார். 

    • பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.

    'தீயவர் குலை நடுங்க' படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

    அறிமுக இயக்குநர் பரத் இயக்க உள்ள "ஓ சுகுமாரி" படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் இணைந்து நடிக்கின்றனர். பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பரத் மஞ்சிராஜு இசையமைக்க உள்ள இப்படத்தில் சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீ வரபிரசாத் படத்தொகுப்பாளராகவும், திருமலை எம். திருப்பதி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர். மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

    கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.

    படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இப்படம் தொடர்பான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.

    அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

     

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    டிரைவர் ஜமுனா படக்குழு

    டிரைவர் ஜமுனா படக்குழு

     

    இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. 'கனா' படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் 'க/பெ ரணசிங்கம்' படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் 11-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் தயாராகி வருகிறது.
    • இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் 'மாணிக்' படத்தில் நடிக்கவுள்ளார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.


    மாணிக் படக்குழு

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'மாணிக்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார். 'மாணிக்' திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மாணிக்

    தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும், 'மாணிக்' திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் 2017-ல் 'டாடி' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'.
    • இந்த படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா 

    'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'டிரைவர் ஜமுனா' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "நான் கல்லூரி படிக்கும் போது என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.


    டிரைவர் ஜமுனா படக்குழு

    ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என் பக்கத்தில் வந்து என் மீது கை வைத்தார். அப்போது பத்மா (வடசென்னை கதாபாத்திரம்) வந்துவிட்டால் வெளியில் ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்ணா இப்படி எல்லாம் கஸ்டமர்களை ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று கூறினேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப என்று சொல்லி திட்டினார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சக்தி கூத்து' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் தற்போது 15 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் மணிகண்டனை கடுமையான போட்டியாளர் என்று கூறி பலர் நாமினேஷன் செய்தனர்.


    மணிகண்டன் ராஜேஷ்

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவளிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரால் மட்டுமே அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.



    • ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    • இவர் படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்கள் உள்ளன.

     

    படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

    படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    ×