என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா ராஜேஷ்"

    • பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.

    'தீயவர் குலை நடுங்க' படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

    அறிமுக இயக்குநர் பரத் இயக்க உள்ள "ஓ சுகுமாரி" படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் இணைந்து நடிக்கின்றனர். பான் இந்தியா அளவில் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பரத் மஞ்சிராஜு இசையமைக்க உள்ள இப்படத்தில் சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீ வரபிரசாத் படத்தொகுப்பாளராகவும், திருமலை எம். திருப்பதி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர். மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

    கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் இதுவாகும்.

    படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இப்படம் தொடர்பான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • சேரனின் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது .

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'கில்லி', 'சச்சின்' சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில், அஜித்தின் 'அட்டகாசம்' படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

    அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் வருகிற 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரீ ரிலீஸை முன்னிட்டு சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

    தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.

    அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

     

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    டிரைவர் ஜமுனா படக்குழு

    டிரைவர் ஜமுனா படக்குழு

     

    இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. 'கனா' படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் 'க/பெ ரணசிங்கம்' படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் 11-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் தயாராகி வருகிறது.
    • இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் 'மாணிக்' படத்தில் நடிக்கவுள்ளார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.


    மாணிக் படக்குழு

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'மாணிக்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார். 'மாணிக்' திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மாணிக்

    தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும், 'மாணிக்' திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் 2017-ல் 'டாடி' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'.
    • இந்த படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா 

    'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'டிரைவர் ஜமுனா' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "நான் கல்லூரி படிக்கும் போது என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.


    டிரைவர் ஜமுனா படக்குழு

    ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என் பக்கத்தில் வந்து என் மீது கை வைத்தார். அப்போது பத்மா (வடசென்னை கதாபாத்திரம்) வந்துவிட்டால் வெளியில் ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்ணா இப்படி எல்லாம் கஸ்டமர்களை ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று கூறினேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப என்று சொல்லி திட்டினார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சக்தி கூத்து' லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் தற்போது 15 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் மணிகண்டனை கடுமையான போட்டியாளர் என்று கூறி பலர் நாமினேஷன் செய்தனர்.


    மணிகண்டன் ராஜேஷ்

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவளிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரால் மட்டுமே அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.



    • ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    • இவர் படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்கள் உள்ளன.

     

    படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

    படப்பிடிப்பில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    • இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    ஃபர்ஹானா

    மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    ஃபர்ஹானா

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஃபர்ஹானா படத்தில் இரண்டாவது பாடலான 'சாரா' பாடல் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    ஃபர்ஹானா

    மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


    ஃபர்ஹானா

    'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'சாரா' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் வரும் 'அசைகின்ற ஆசை வந்து அங்கும் இங்கும் சந்தம் சிந்தும்' என்ற வரி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் முனுமுனுக்கும் வரியாக அமைந்துள்ளது.




    • 'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
    • இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளனர்.

    'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

     

    ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதல்முறையாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பாரர்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறதாக படக்குழு அறிவித்துள்ளது.

    ×