என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபர்ஸ்ட் லுக்"

    மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    ஒளிப்பதிவு: Antony Samson

    எடிட்டிங்: KM பிரகாஷ்

    படத்தின் டப்பிங் பணிகளை மோகன்லால் முடித்துள்ளார். படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது.

    • நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார்.
    • நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி,  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை காலை 10.10 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.

    • One Piece என்ற பிரபல அனிமே பிராஞ்சைஸின் லைவ்-ஆக்ஷன் வடிவம் மீண்டும் நெட்பிளிக்ஸில் வர உள்ளது.
    • இரண்டாம் சீசனின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த One Piece என்ற பிரபல அனிமே பிராஞ்சைஸின் லைவ்-ஆக்ஷன் வடிவம் மீண்டும் நெட்பிளிக்ஸில் வர உள்ளது. உலகம் முழுவதும் அபார வரவேற்பைப் பெற்ற முதல் சீசனுக்குப் பிறகு, இந்த தொடரின் இரண்டாம் சீசனை படக்குழு படமாக்கினர். இந்நிலையில் இரண்டாம் சீசனின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இரண்டாம் சீசன் அடுத்தாண்டு வெளியாக இருப்பதாகவும். அதோடு மட்டும் நிறுத்தாமல் தொடரின் சீசன் 3 -யும் படமாக்கப்பட்டு வருவதாக அறிவிப்பை கொடுத்துள்ளனர். இதனால் ஒன் பீஸ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    இந்த அறிவிப்பு, ஜப்பானின் டோக்கியோவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் One Piece Day விழாவில் வெளியாகியது. இதன் மூலம், Eiichiro Oda உருவாக்கிய புகழ்பெற்ற மங்காவின் பயணம் மீண்டும் ரசிகர்களிடம் உயிர் பெறுகிறது.

    புதிய சீசனின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பட்டியல் மாற்றமடையுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    • எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
    • படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் ஒருவன் காதலலுக்காக மற்றொருவன் மிஷனுக்காக என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.

    எஸ்ஜே சூர்யா அடுத்து சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த காலத்தில் பலரும் யூடியூப் , இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ் மற்றும் Influencers பலரும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்பொழுது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இவர் , மனைவி தீபா மற்றும் இவருடைய அம்மா என குடும்பமாக சேர்ந்து செய்யும் லூட்டி வீடியோஸ், கணவன் மனைவி இடையே நடக்கும் பரிதாபங்கள் வீடியோ என இவர்களின் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது மேலும் இவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

    இவர் தற்பொழுது டாட்டூ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை வேனு தேவராஜ் எழுதி இயக்கியுள்ளார். படத்தை ரென்சு மற்றும் சஞ்சு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படமே இந்தியாவில் முதல் ஏஐ இன்வஸ்டிகேஷன் திரில்லராக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.
    • கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.

    Mudhra's film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

    சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.

    நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

     

    கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

    பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

    தொழில் நுட்ப குழுவினர்

    எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S

    தயாரிப்பு - ரேஷ்மி மேனன்

    ஒளிப்பதிவு - K.A.சக்திவேல்

    இசை - ஸ்ரீ

    பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா

    பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து

    படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK

    கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா

    லைன் புரடியூசர் - திலீப் குமார்

    நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி

    கலை - M.தேவேந்திரன்

    மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
    • இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
    • படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான  ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம்  எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

    • ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
    • இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

    இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

    ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.

    இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.

    பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.

    காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா .
    • பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

     2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

    அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
    • இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

    2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

    'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

    இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

    இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார்.
    • இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் தமிழ் குரல் என்ற செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    சீரிஸின் டீசரைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.

    இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×