search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications"

    • 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 1-1-2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் வெளியான பிறகு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றம், திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளது. பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் 1 லட்சம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெயர் நீக்கத்துக்கான படிவம்-7, முகவரி மாற்றம், சட்டமன்ற தொகுதி மாற்றம், திருத்தப்பணிகளுக்கான படிவம்-8 என மொத்தம் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    • குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்தி செயல்விளக்கம் அளித்தார்.
    • சத்துமருந்து உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருலோகி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சார்பில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை உதவி டாக்டர் தேவராஜ், குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்தி செயல்விளக்கம் அளித்தார்.

    மேலும், சத்துமருந்து, குடற்புழு நீக்க மருந்து உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

    முகாமில் வட்டார தொழில்நுட்ப குழு ஒருங்கி ணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான துரை. சிவவீரபா ண்டியன், வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன், மனிஷியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
    • விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் பார்த்து தெரிந்து கணக்கிட்டு கொள்கிறார்கள்.

    இதுபற்றி உயர் அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான், வீடுவீடாக சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், விண்ணப்பத்தில் சரிவர பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்து வருகிறார்கள் என்றும் தெரி வித்தார். இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள சாப்ட்வேர் செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்ததெந்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்து விடும்.

    அந்த பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும். அதன்மூலம் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது தெரிந்து விடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை விண்ணப்பம் வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார்

    கோவை,

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று படிவம் வழங்கி பூர்த்தி செய்து, திரும்ப பெற்று இந்த திட்டத்துக்கென வடிவமைத்துள்ள மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,401 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    839 கடைகளுக்கு உட் பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 கார்டுதாரர்கள் விண்ணப்பம் பெற்று கொண்டனர்.

    அதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 விண்ணப்பம் பெறப்பட வில்லை.

    மீதமுள்ள 562 கடைக ுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த கடைகளில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

    ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். இவர்களிலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள், விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தி ருக்கின்றனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பம் வழங்க வில்லை.

    இரு முகாம்களிலும் சேர்த்து 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்க வில்லை.

    இவர்களுக்காகவே விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 குடும்பத்தினர் விண்ணப்பமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார். விடுபட்டோருக்கு நடத்தப்படும் சிறப்பு முகாமில் கூடுதல் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் பூர்த்தி செய்து திரும்ப பெற்றுள்ள விண்ணப்பங்கள் அதிகம். ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
    • டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

     காங்கயம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

    இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றியம் மகளிர்க்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சினம்பூண்டி ஊராட்சியில் உள்ள செந்தமிழ் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    புது ஊராட்சி ஒன்றியம் சிவசாமிபுரம் ஊராட்சியில் அரசு கல்லூரி கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கூடநாணல் ஊராட்சியில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

    திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், பூதலூர் வட்டாட்சி யர்பெர்சி யா, பேரூராட்சி செயல் அலுவலர்நெ டுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராஜா, பொற்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது.
    • இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு மாற்றுத்திற னாளிகள் நல வாரியம் சமுக பாதுகாப்புத் திட்ட த்தின் கீழ், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை பெற்று 10 வயதிற்கு மேற்பட்ட மாற்று த்திறனாளிகள் நல வாரி யத்தில் பதிவு செய்திருப்பின் உதவிகள் பெற முடியும்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது.

    நல வாரியத்தின் மூலம் மாற்றுத்தறனாளியின் மகன்-ம களுக்கு கல்வி உதவித்தொகை பெற 10-ம் வகுப்பு அதற்கு மேல் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும், மாற்றுத்திற னாளியின் மகன்-மகளுக்கு நலவாரியத்தின் மூலம் திருமண உதவித்தெகையும், மாற்றுத்திறனாளிகள் கண் கண்ணாடி வாங்கி பயன் பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிக்கு விபத்து ஏற்பட்டால் நல வாரியத்தின் மூலம் விபத்து நிவாரணம் மற்றும் பெண் மாற்றத்தினாளிக்கு நல வாரியத்தின் மூலம் பிரச வம், கருச்சிதைவு ஆகிய வற்றிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு பிற அரசுத் துறைகளிடமிருந்து நல வாரிய திட்டத்தில் உதவித் தொகை பெற்றிரு க்கக்கூடாது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக த்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெ க்டர் ஷஜீவனா தெரி வித்துள்ளார்.

    • கடந்த வாரம் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
    • 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர்.

    நெல்லை:

    தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர்க்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த மாதம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடு வீடாக மகளிர் உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் சென்று வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் மாநகர பகுதிகளில் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    நெல்லை மாநகர பகுதியில் இதற்கென கூட்டுறவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    வீடு, வீடாக...

    குழுக்களாக பிரிந்து மாநகரப் பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர். இன்று வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சாலை தெரு, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டோக்கன்களில் எந்தெந்த தேதிகளில் யார்-யார் வர வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டி ருந்தது.

    அதன்படி குறித்த நேரத்தில் பெண்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார்.
    • 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தி ட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார். அதனடி ப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 அன்று தொடங்கி 4.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெ ற்று வருகிறது.

    முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில், முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்ப ங்களை பதிவு செய்வதற்கு 1092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ண ப்பங்களை பூர்த்தி செய்வத ற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.  அனைத்து முகா ம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள் வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோ ருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
    • மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    தமிழக முதல்-அமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.

    மதுரை மாநகராட்சி உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த 24-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களிலும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 38 இடங்களிலும், மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளில் 182 இடங்களிலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் 188 இடங்களிலும், மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதிகளில் 69 இடங்களில் என மொத்தம் 512 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 207 நியாய விலைக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 94 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலத்திற்கு உட்பட்ட 208 பள்ளி மற்றும் கல்லூரிகள், 83 சமுதாய கூடங்கள், 4 பூங்காக்கள், 72 அரசு துறை கட்டிடங்கள், 21 வழிபாட்டு தலங்கள், 116 திருமண மண்டபங்கள், 8 தனியார் குடியிருப்பு பகுதிகள் என மொத்தம் 512 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது.
    • இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது. இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    2 கட்டம்

    முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது . 2-ம் கட்டமாக 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதை தொடர்ந்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வழங்க வேண்டும். மகளிர் உரிமை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க மாவட்டத்தில் 10 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஆய்வு

    இதற்கிடையே டோக்கன் வழங்கும் பணியை முதல் கட்டமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கன்னங்குறிச்சியில் இன்று காலை ஆய்வு செய் தார். அப்போது டோக்கன் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம்கட்ட முகாம் ஆக.5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.

    நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக 303 முகாம்களுக்கும் என மொத்தம் 914 முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    முகாமில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.

    இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் பார்வையிட்டனர்.

    ×