என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications"

    • சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மாணவி வழக்கு.
    • மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் கோரி மாணவி வழக்கு தொடரப்பட்டது.

    அதன்படி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    அவகாசம் வழங்கப்பட்டதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    • இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.

    மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

    இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.

    மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.

    அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகிறது. தற்போது www. tnesevai.tn.gov.in (அல்லது)www. tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 வரை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

    மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முக மையால் விண்ணப்பத்தை சரிபார்க்க ப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பி த்து பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
    • இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

    மதுரை

    மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், தொழில் மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னி லையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதி கள் பங்கேற்ற தொழில் நிறுவ னங்களுக்கான இணையவழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்து றை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்க ப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப் படும்.

    ஒற்றை சாளர முனை யத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறை கள் தெளிவுபடுத்த ப்பட்டுள் ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படு கிறது.

    ஒற்றை சாளர முனை யத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15 ஆயிரம் விண்ணப்பங் களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப் பட்டு வரும் இந்தத் திட்டத்தை தொழில் முனை வோர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் கணேசன் (மதுரை) மாரிமுத்து (ராமநாதபுரம்) உள்பட அரசு அலுவலர்கள், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
    • கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 24-ந்தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்பு ரத்தில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந்தேதி வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, போனேபைய்டு சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
    • இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    விண்ணப்பதிவு தொடங்கியது

    இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.

    இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    • சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2023ஆம் ஆண்டிற்கான சுதந்திரதின விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றும் மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையளதத்தில் 10.06.2023 வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்படி அரசாணையின்படி சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரியும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமூக சேவை தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
    • ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:-

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மாணவா்களுக்கு உதவும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பள்ளி மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 8 அல்லது 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (மாற்று திறனாளிகள், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவா், தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவா்கள்) ஆகியவற்றுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வா் அல்லது அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள்: 9994043023, 7708709988, 9840950504, 9442220049 ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிட ப்பட்டுள்ளது.
    • சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட் ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகள் , வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலா கூட்ட மைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்க ப்படும் மணிமேகைல விருது வழங்குவதற்கான அறி விப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கி ராம வறுைமஒழிப்புசங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமை ப்புகள் முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாகபயன்படுத்தல், வங்கிகடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதாரமேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிபெற்றிருத்தல், சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில்தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பி ப்பதற்கான தகுதிகள் மற்றுமதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்பு டைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொ ள்ள லாம். விருதிற்குதகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில்25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்துள்ளார்.

    • சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்ப டவுள்ளன.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளிந்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் 15.08.2023 அன்று நடைபெறயிருக்கும் சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் , நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தி லிருந்து பெற்று, அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் (3 நகல்கள்) வருகின்ற 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.14, தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010 (தொலைபேசி எண். 04362-236791) என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.
    • அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

    இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவிகள் வரும் 15-ம் தேதி வரை www.https://scert.tnschool.gov.in

    என்ற இணையதள முகவரியில் விண்ணப்பி க்கலாம்.

    அவ்வாறு இணையத ளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பக்கத்து மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு அந்தந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை புதுவை மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் கூட பெற வில்லை என்பது மாணவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுகாதாரத்துறை செ ன்டாக் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை சென்டாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    எனவே புதுவை அரசு, சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் காலதாமதமின்றி மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற்று தரவரிசை பட்டியலை

    வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும். இருமாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது புதுவை அரசு கடுமை யான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×