search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் பயில 24-ந்தேதி தேர்வு போட்டிகள் நடக்க உள்ளது: மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு
    X

    விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் பயில 24-ந்தேதி தேர்வு போட்டிகள் நடக்க உள்ளது: மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு

    • விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
    • கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24-ந்தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர் விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டா, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 24-ந்தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்பு ரத்தில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்திசெய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பபிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந்தேதி வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, போனேபைய்டு சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×