search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deadline"

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது
    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது

    குடிமங்கலம் :

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இக்கொள்முதலுக்கான, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தாமதம் ஏற்படுகிறது. இந்த உடுமலை ஒன்றியத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, விண்ணப்பங்களை பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

    டிரம்ப் டுவிட்டரில் நேற்று முன்தினம் மேலும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன்” என கூறி உள்ளார். #DonaldTrump #MexicoBorder
    24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
    புதுடெல்லி:

    ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.



    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  #NGT #Volkswagen #Deposit 
    டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க காலிமனைகளில் தேங்கி உள்ள குப்பை கழிவுநீரை அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சிதுறை ஆணை பிறப்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது சம்பந்தமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நகராட்சிகள் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து டெங்கு பரப்பக்கூடிய கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    கடந்த ஆண்டு டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களை முதன்மையாக எடுத்து கொண்டு கொசு உற்பத்தியை தடுக்க நகராட்சிகள் பலவித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் குப்பைகள் அதிகம் சேரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி வாயக்கால்களை சுத்தம் செய்து கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பராமரிப்பின்றி இருக்கும் காலிமனைகளில் புதர்கள் மண்டியும், குப்பை மற்றும் தண்ணீர் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

    எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை நகராட்சிகள் சட்டத்தின்படி புதுவை மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் மழை கழிவுநீர் முதலியவற்றை 15 நாட்களுக்குள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்ககூடிய செயல் என்பதால் இது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்ககூடிய குற்றமாகும்.

    எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஆணைப்படி காலிமனை உரிமையாளர்கள் தங்களது காலிமனையை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் சுகதாரத்தோடும் வாழவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்கள் விட்டை சுற்றியுள்ள இடங்களில் நீர்தேங்கும் ஆதாரங்களை நீக்கி நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அந்த வகையில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. #India #Nepal #ModiVisitNepal
    காட்மாண்டு:

    பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் மஸ்டாக் மாவட்டத்திக்கு சென்று அங்குள்ள முக்திநாத் கோவிலிலும் சாமி கும்பிட்டார். கடல் மட்டத்தில் இருந்து 12,172 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் இருவருக்குமே புனித ஸ்தலமாகும். மோடிக்கு இந்த 2 கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைநகர் காட்மாண்டு திரும்பிய மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக சரக்குகளை கையாளுதல், வர்த்தகம், நேபாளத்துக்கு மேலும் 4 வழித்தடங்களில் விமான போக்குவரத்து, எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எரிசக்தி பகிர்வு, டெராய் பகுதியில் 1,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    தனது 2 நாள் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை மோடி நாடு திரும்பினார்.  #India #Nepal #ModiVisitNepal 
    ×