search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NGT"

    • கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
    • இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

    • பஞ்சாப் அரசு ஏற்கனவே ரூ.100 கோடியை செலுத்தி இருந்தது.
    • மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ேதசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது.

    இதில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    குறிப்பாக கழிவு மேலாண்மையில் அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும், வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது. இதில் பஞ்சாப் அரசு ஏற்கனவே ரூ.100 கோடியை செலுத்தி இருந்தது.

    மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

    ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.

    ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.

    இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.

    கடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்பு விவரம் வருமாறு:-



    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமி‌ஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteCase #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.



    இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

    இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #SterliteCase #SupremeCourt

    24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
    புதுடெல்லி:

    ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.



    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  #NGT #Volkswagen #Deposit 
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையை விரைந்து செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Volkswagen



    ஃவோக்ஸ்வேகன் டீசல் வாகனங்களில் வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது. 

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசு வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.



    இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.

    அதன்படி “நவம்பர் மாத உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை? அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார். 
    ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிடவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார். #MDMK #Vaiko #SC #SterlitePlant
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ரோகிங்டன் நரிமன், நீதியரசர் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    நான் (வைகோ), இந்த வழக்கில் நேற்று மேல் முறையீடு செய்து இருக்கின்றேன். வழக்கு எண் 913/2019. அதையும் சேர்த்து இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

    ‘உங்களுக்காக யார் வாதாடுகிறார்?’ என்று நீதிபதி சின்கா கேட்டார். ‘நானேதான் வாதாடுகிறேன்” என்று கூறினேன்.

    எனவே, முதன்மை வழக்கோடு வைகோவின் மேல் முறையீட்டையும் சேர்த்து விசாரிக்க நீதிபதி ஆணை பிறப்பித்தார்.


    ஆலையை உடனே திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கேட்டார்.

    “அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக்கூடாது என்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கின்றோம். பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கில் விசாரணை நடக்கும். ஸ்டெர்லைட் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம். அரசுத் தரப்பும், மற்றத் தரப்பினரும் முன்வைக்கலாம் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

    ஆலையைத் திறக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இன்றைய விசாரணையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சிவபால முருகன், கழக வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, ஆனந்தசெல்வம், சுப்பாராஜ் ஆகியோர் வைகோவுடன் இருந்தனர். #MDMK #Vaiko #SC #SterlitePlant
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்தார். #SterlitePlant #HCMaduraiBench
    மதுரை:

    தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையால் மாசு கழிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவை நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடந்த வாரம் பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா சார்பில் வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜரானார்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    இதனை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterlitePlant #HCMaduraiBench
    ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின்னரே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியானதாக தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு குற்றம்சாட்டியுள்ளார். #NGTorder #NGTorderdictated #sterlitemanagement
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்து ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு மதியம் 2 மணி அளவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் 15-12-18 அன்று காலை 7.39 மணிக்கு என்.ஜி.டி.பி.ஏ. என்ற உபயோகிப்பாளர் ஐ.டி.யில் இருந்து ஆபாஷ் பாண்டியா என்ற உபயோகிப்பாளர் ஐ.டி.க்கு ஆவணம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அங்கு தீர்ப்பு ஆவணம் திருத்தப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆபாஷ் பாண்டியா என்பவர் வேதாந்தா நிறுவனத்தின் வங்கி கணக்கை கையாளுபவராக உள்ளார். இந்த ஆபாஷ் பாண்டியாவும், உபயோகிப்பாளர் ஐ.டி.யில் உள்ள ஆபாஷ் பாண்டியாவும் ஒரே நபரா? என்பது எங்களுக்கு தெரியாது. இதை போலீசார் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் கமிட்டி அறிக்கை எங்களுக்கு வரவில்லை. அதே நேரத்தில் ஆலை தரப்புக்கு உத்தரவு நகல் வந்து உள்ளது. இப்படி சில சட்டநடைமுறைகள் ஒட்டு மொத்தமாக மீறப்பட்டு உள்ளது.

    வேதாந்தா நிறுவனமும், அதன் ஆலோசகர்களும், நீதித்துறையும் ரகசிய காப்பை அப்பட்டமாக மீறி உள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் வேறு என்னென்ன அத்துமீறல்கள் இந்த தீர்ப்பில் நடந்து இருக்கும்? என்பது அம்பலமாகும்.

    இது தொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்க உள்ளோம். தமிழக அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று அனைத்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அத்தனை முயற்சியிலும் ஈடுபடுவோம்.

    அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். இன்று தூத்துக்குடி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். பசுமை தீர்ப்பாயத்தின்  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சாதகமான தீர்ப்பு மக்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NGTorder #NGTorderdictated #sterlitemanagement
    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #SterliteProtest #NGT
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3  வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.



    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

    எனவே, விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.  #SterliteProtest #NGT
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #NGT
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.



    இந்த பரிசீலனையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #SterliteProtest #NGT

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. அத்துடன், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்வதற்காக மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிபுணர் குழு கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், இரு தரப்பும் பதில் மனுக்கள் தாக்க்ல செய்ய உத்தரவிட்டார். அதன்படி தமிழக அரசு தரப்பிலும், ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து இன்று தேசிய பசுமைத்  தீர்ப்பாயத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Sterlite #NGT
    ×