search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reopen"

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
     
    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சரண முழக்கங்களுடன் திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மாசி (மலையாளத்தில் கும்போஹம்) மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

    வரும் 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
    கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததால் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில், பரிகார பூஜைக்குப்பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது. #SabarimalaTemple #PurificationRituals #SabarimalaProtest
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் இன்று இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைவது கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்றால் கோவில் நடையை மூடுவோம் என்றும் ஏற்கனவே பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் தெரிவித்து இருந்தனர்.



    இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தார்.

    இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. சாமி தரிசனமும் நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா கூறியதாவது:-

    சபரிமலை கோவில் சன்னிதானத்தில் இளம்பெண்கள் இருவர் நுழைந்ததாக தகவல் வந்துள்ளது. இதற்காக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும்.

    எந்த வயதை சேர்ந்த பெண்கள் வந்தார்கள் என்பதை உறுதிசெய்த பின்பு தந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து பரிகார பூஜை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் ஒரு மணி நேர பரிகார பூஜைக்குப் பின்னர் சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  #SabarimalaTemple #PurificationRituals #SabarimalaProtest
    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #SterliteProtest #NGT
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3  வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.



    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

    எனவே, விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.  #SterliteProtest #NGT
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #NGT
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.



    இந்த பரிசீலனையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #SterliteProtest #NGT

    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    சென்னை:

    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    பின்னர் திருநாவுக்கரசர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரம் கிடைப்பது இல்லை என அமைச்சர் தங்கமணி கூறி இருப்பது, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது போல் உள்ளது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது. தாமிரம் போன்ற பொருட்களை வாங்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதை காரணம் காட்டி மின்தடை ஏற்படும் சூழ்நிலையையும் ஏற்படுத்தக்கூடாது. மின் துறை அமைச்சரின் பேச்சு, மக்களின் குரலாக இல்லாமல் ஸ்டெர்லைட்டின் குரலாக இருப்பது கண்டனத்துக்குரியது.

    மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நீட் தேர்வு காரணமாக தொடரும் மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் வேதனையை தருகிறது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைவதால் அவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்து விடுகிறது.

    மாணவர்களின் நலனை அரசு புறக்கணித்துவிட்டது. இதற்காக பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தக்கூடாது. உயிரை மாய்த்துக்கொள்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது. தற்கொலை செய்வதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும்.

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சில காலத்துக்கு நீட் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசிடம், தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×