search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாசி மாத பூஜைக்காக சரண முழக்கங்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
    X

    மாசி மாத பூஜைக்காக சரண முழக்கங்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சரண முழக்கங்களுடன் திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மாசி (மலையாளத்தில் கும்போஹம்) மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

    வரும் 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
    Next Story
    ×