search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masi month puja"

    • மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.
    • பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சரண முழக்கங்களுடன் திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மாசி (மலையாளத்தில் கும்போஹம்) மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

    வரும் 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
    ×