என் மலர்
நீங்கள் தேடியது "மாசி மாத பூஜை"
- மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.
- மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது.
மாசி மாதம் என்பது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட சிறப்பான மாதம் என்று சொல்வார்கள். ஆனால் மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்றதாகும்.
* மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வதும், மந்திர உபதேசம் செய்வதும் சிறப்பு.
* மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திரமே 'மாசி மகம்' என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீர்த்தங்களுடன் அமைந்த ஆலயங்களில் தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
*12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் 'மாசி மகாமகம்' மாசி மாதத்தில்தான் நடைபெறுகிறது.
* மாசி மாதம் வரும் சங்கடகர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எல்லாவித தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.
* மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.
* மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது. எனவே மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வது விசேஷம்.
* உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மகம் அன்று அவற்றை தொடங்கினால் அந்தந்த துறையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
* மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும்.
* மாசி மாதம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால் பெருமாளின் அருளை பெறலாம்.
* பொதுவாக அமாவாசை நாளில்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சொல்வார்கள். ஆனால் மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலனை தரும் என்கிறார்கள்.
- மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.
- பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.






