search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Green Tribunal"

    • கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
    • இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

    சென்னையில் ஓடும் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #HC #NGT #TNGovt
    சென்னை:

    சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

    இதுபற்றிய விசாரணையின் முடிவில் வெளியான 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.

    நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.

    கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.

    மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், ‘நீரி’ ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23-ம் தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். #HC #NGT #TNGovt
    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். #Sterlite #SC
    திரூவாரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியுள்ளார். அப்போது அவர் தமிழக மக்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் தமிழக அரசு, கஜா புயலுக்கு கேட்டுள்ள நிவாரண நிதி குறித்தும் எதுவும் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் நிலையை விமர்சித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதனை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரியும், உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரியும் வருகிற 2-ந் தேதி முதல் 4-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முழு ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterlite #SC

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. #NGT #NationalGreenTribunal #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இன்று வழங்கப்போகும் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #NGT #NationalGreenTribunal #SterlitePlant 
    சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal
    சென்னை:

    சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.

    இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.

    பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
    நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    புதுடெல்லி:

    நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்களாகும்.

    இந்த அணுத்துகள்களை ஆய்வு செய்தால் சூரியன் மற்றும் நியூட்ரினோதுகள்களின் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் மலைப் பகுதியில் மிகப்பெரிய ஆய்வு கூடம் அமைத்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருக்கும் பொட்டிபுரம் கிராமம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்காக மலைக்கு அடியில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகள் கடந்த 2015-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டன.

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை அமைத்தால் தங்கள் ஊர்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்ட நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த அமைப்பு தனது மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தது.

    கடந்த மாதம் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது நீதிபதிகள் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



    அதன்பேரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துப் பூர்வ தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் 9-ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    அப்போது தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி வாதாடினார். அதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர ரத்தோர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை வெளியிட்டது.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு இடைக்கால தடை விதித்தனர். தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:-

    தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை அமைக்க வேண்டுமானால் வனவிலங்கு வாரியத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த ஆய்வு திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகளுக்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை நீடிக்கும்.

    அந்த ஆய்வு பணிகள் முற்றிலும் முடிந்தபிறகே நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வு பணிகள் முடிவடையாத காரணத்தால் மத்திய அரசு அளித்து இருக்கும் அனுமதியை ரத்து செய்ய இயலாது.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து இருப்பதால் பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் தெரிவித்து இருக்கிறார்கள். என்றாலும் இந்த ஆய்வு திட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால் இந்த திட்டத்தால் அந்த பகுதிகள் சர்வதேச அளவுக்கு மிகப்பெரிய மேம்பாட்டை அடைய முடியும் என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal
    நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #NeutrinoProject #NGT
    புதுடெல்லி:

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரினோ ஆய்வு மையம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


    தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NeutrinoProject #NGT #TamilNaduPollutionControlBoard
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர் ஆனார்கள். #sterliteissue #vaiko

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து கேட்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகலாய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் வனத்துறையின் விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வந்த வல்லுனர் குழுவினர் முன்னிலையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆஜராகி கருத்துக்களை தெரிவித்தனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் ஆஜரானார்கள்.


    தீர்ப்பாயத்தின் முன்பு தூத்துக்குடி மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் தங்களது நெத்தியில், ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர்.

    பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் அதிகமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #sterliteissue #vaiko

    நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment
    புதுடெல்லி:

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

    இந்நிலையில் டாட்டா நிறுவனம் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.



    இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு 4-ந்தேதி (நேற்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஆனால் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகவில்லை. இதனால் விளக்கம் அளிக்காத மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து டாடா நிறுவனம் தரப்பில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வு மையத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டது என வாதிடப்பட்டது.

    மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வக்கீல் வாதிடுகையில், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசு எப்படி வனத்துறை நிலத்தை ஒதுக்கியது?. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை இருக்கும்போது இந்த திட்டம் அதில் கூறப்பட்டு இருப்பதற்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?. அணுவை பல துகள்களாக சிதற அடிக்கும்போது சுற்றுச்சூழலும் பாதிப்பு அடையாதா?. இது தொடர்பாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனமும் 8-ந்தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.  #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment
    நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. #Neutrino #FederalGovernment #NationalGreenTribunal
    புதுடெல்லி:

    தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், சுமார் 2½ கி.மீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.



    இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

    இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில், “ஏற்கனவே மனுதாரர்கள் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக தடையில்லா சான்றிதழ் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என அறிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர்” என்று கூறப்பட்டது.

    மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், “நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி அளித்ததில் பல விதிமீறல்கள் உள்ளன. அப்பகுதி மக்களிடம் எவ்வித கருத்து கேட்பும் நடத்தவில்லை. இந்த திட்டத்தால் என்னென்ன சுற்றுச்சூழல் மாற்றம் நிகழும் என்பது தொடர்பாக அவர்களது அறிக்கையில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    தமிழக அரசு தரப்பில், “இந்த திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று கூறி மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே கருத்துகேட்பு கூட்டத்தை மாநில அரசு நடத்த முடியாது” என்று வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 2017-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு நாளை (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்று (வியாழக் கிழமை) ஒத்திவைத்தனர். #Neutrino #FederalGovernment #NationalGreenTribunal
    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். #sterliteplant
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை காலவரம்பின்றி மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

    இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டும் ஆய்வு நடத்தியும் மக்கள் கருத்தை கேட்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    மூவர் குழுவினர் சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டனர். பின்னர் நேற்று முன் தினம் தூத்துக்குடியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

    அதன் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினார்கள். நேற்று அவர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றனர்.

    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுத்திருப்பவர்களில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், காண்டிராக்டர்கள், விவசாயிகள், கிராம மக்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் விருப்பம் உண்மைதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மனுவுடன் தங்களது ஆதார் எண்ணையும் இணைத்துள்ளனர்.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழுவினரும் ஆலைக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள் வந்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாய ஆய்வு கமிட்டியின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. #sterliteplant
    ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.#NGTSterliteCommittee #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt
    ×