search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sterlite issue"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால் தூத்துக்குடி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #sterliteissue #supremecourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர், காற்று மாசு ஏற்படுவதாக கூறி பல்வேறு கிராம மக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

    பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி பேராசிரியை பாத்திமாபாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மதுரை ஐகோர்ட்டு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நார்மன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோவும் ஆஜராகி தனது மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று நேற்று தீர்ப்பு கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

    ஏற்கனவே தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15.12.18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்தவுடன், முதல்அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுனர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும்.

    இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

    நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #sterliteissue #supremecourt

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். #Sterlite #SC
    திரூவாரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியுள்ளார். அப்போது அவர் தமிழக மக்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் தமிழக அரசு, கஜா புயலுக்கு கேட்டுள்ள நிவாரண நிதி குறித்தும் எதுவும் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் நிலையை விமர்சித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதனை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரியும், உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரியும் வருகிற 2-ந் தேதி முதல் 4-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முழு ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterlite #SC

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர் ஆனார்கள். #sterliteissue #vaiko

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து கேட்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகலாய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் வனத்துறையின் விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வந்த வல்லுனர் குழுவினர் முன்னிலையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆஜராகி கருத்துக்களை தெரிவித்தனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் ஆஜரானார்கள்.


    தீர்ப்பாயத்தின் முன்பு தூத்துக்குடி மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் தங்களது நெத்தியில், ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர்.

    பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் அதிகமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #sterliteissue #vaiko

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையை அரசியலாக்கி பார்க்கக் கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #sterliteissue
    கோவில்பட்டி:

    செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: -

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், போராட்டத்துக்கும் மதிப்பு அளித்து, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. எனினும் பொதுமக்களின் போராட்டம் 100 நாட்கள் நடந்தது. 100வது நாள் போராட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து, முதல்அமைச்சரிடம் தெரிவித்து, அவர்களுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. 

    போராட்ட குழுவினரை முதல் அமைச்சருடன் சந்திக்க வைத்தது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்று, ஆலை நிர்வாக பயன்பாட்டுக்கு அனுமதி பெற்ற போதும், தமிழக அரசு அதனை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தெரியாமல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார். 

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றபோது, தமிழக அரசு எடுத்த நிலைப்பாட்டில் பசுமை தீர்ப்பாயம் தலையிடக் கூடாது என்று அரசு வக்கீல்கள் வலியுறுத்தினர். இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையை அரசியலாக்கி பார்க்க கூடாது. 

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். #sterliteissue
    ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு வாதத்தின்போது ஸ்டெர்லைட்நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #SterliteIssue #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள்
    தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

    அதற்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்’ என்று வைகோ கூறினார்.

    ‘2018 மே 22, இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர். காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. 

    தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனவும் வைகோ கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

    முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார். 

    இந்த வழக்கில் வைகோவுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் ஆகியோர் பங்கேற்றார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteIssue #Vaiko
    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #SterliteIssue
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக வாதம் நடைபெற்றது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தலைமை நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது.

    இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியம், சந்துரு ஆகியோரின் பெயர்களை தலைமை நீதிபதி கோயல் பரிந்துரை செய்தார். இவர்களில் யாரிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சந்துரு இவ்வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவன வழக்கறிஞரின் கருத்தை கேட்டபிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.



    முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 16, 17-ம் தேதியில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 3.5 லட்சம் டன் காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றங்கரை முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேசமயம், ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. இதனை ஏற்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அத்துடன், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் ஆலையை மூடினீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆலையை மூடும்போது உள்ள ஆதாரத்தையாவது தாக்கல் செய்யுங்கள் என்று வலியுறுத்தினர். அதற்கும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. கால அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, ஆதாரம் இல்லாமல்தான் ஆலையை மூடியிருப்பதாகத்தான் தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterliteIssue
    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை தமிழக அரசு துண்டித்தது. பின்னர் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியாகினர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான அரசாணையை வெளியிட்டது.



    ஆனால், அரசாணை வலுவாக இல்லாததாலும், ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாக போதிய ஆதாரங்களை அரசு சமர்ப்பிக்காததாலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.



    இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition

    ×