search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caveat petition"

    • ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

    சென்னை:

    டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    இது குறித்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை செல்லாது என அறிவித்தது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தக்கல் செய்யப்பட்டது.

    • செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவில், நீதிமன்ற காவல் சட்டப்படியானது என தீர்ப்பு.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது அவரது நீதிமன்ற காவல் சட்டப்படியானது எனத் தெரிவித்தார்.

    தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனை மேல்முறையீடு மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில் தங்களுடைய கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

    • மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
    • இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என ஈபிஎஸ் மனு

    அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அ

    திமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #AnbumaniRamadoss
    புதுடெல்லி:

    மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், அரசு நிலம் என்று ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்களை எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். மத்திய அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பா.ம.க. வக்கீல் கே.பாலு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அல்லது வேறு ஏதாவது தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad #AnbumaniRamadoss
    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை தமிழக அரசு எதிர்த்தால் தனது கருத்தை அறிய வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில், புராதான சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைது செய்ய தொடங்கினார்.

    இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ந்தேதி பிற்பகலில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

    நவம்பர் 30-ந்தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.


    இதையடுத்து வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். #PonManickavel
    நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நீட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கூறியிருந்தார். #NEET #NeetExam #SC #Caveat

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை தமிழக அரசு துண்டித்தது. பின்னர் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியாகினர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான அரசாணையை வெளியிட்டது.



    ஆனால், அரசாணை வலுவாக இல்லாததாலும், ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாக போதிய ஆதாரங்களை அரசு சமர்ப்பிக்காததாலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.



    இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition

    ×