search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling cases"

    சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    சென்னை:

    தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி.பொன்.மாணிக்கவேல் பணியாற்றினார்.

    அவர் சிலைக்கடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அவரை திடீரென ரெயில்வே ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஸ்தபதி உள்பட பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.



    இதையடுத்து. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த நிலையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளையும், எதிர் காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. பின்னர், இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை, ஐகோர்ட்டு அமைத்தது.

    இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கினர்.

    ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் போலீசார், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளனர்.

    சிலைக்கடத்தல் வழக்கில் 47 பேரை கைது செய்துள்ளனர். ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த 28 ஆண்டுகளில் இந்த பிரிவு போலீசார் செய்த பணியை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ஓர் ஆண்டிலேயே முறியடித்து விட்டனர்.

    எனவே, சிலைக்கடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்கிறோம். அதேநேரம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புப் படையின் புலன்விசாரணை எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம்.

    நவம்பர் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டுக்கு நியமிக்கின்றோம். அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கவேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.

    மேலும் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதே நேரத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2 ஆயிரம் சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். #IdolSmuggling
    அம்பை:

    அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், திரிபலிநாதர் ஆகிய 4 சிலைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கோவிலில் திருடுபோன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்த கோவிலில் ஆய்வு செய்வதற்காக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக்குறிச்சிக்கு வந்தார். அவர் குலசேகரமுடையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கோவில் உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் சீதாலட்சுமி, முருகன், நிர்வாக அதிகாரிகள் வெங்கடேசன், ஜெகநாதன் ஆகியோரிடம் கோவில் நிலவரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள 17 விக்கிரகங்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இக்கோவிலில் இருந்து 4 சிலைகள் திருடுபோய் உள்ளன. இதில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலும், அம்மன் சிலை தென்ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அந்த சிலைகளை மீட்போம். மேலும் இக்கோவிலில் இருந்த 17 விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை மீண்டும் இக்கோவிலில் வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும். கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஆயிரம் சிலைகள் தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அவற்றை கண்டறிந்து அந்தந்த கோவில்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolSmuggling
    சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் மீது உடன் பணியாற்றிய 15 போலீசார் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று புகார் மனு அளித்தனர். #PonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்த பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

    அவரை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சிலை கடத்தல் பிரிவில் பணிபுரிவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து 60 போலீசார் ‘ஆன் டியூட்டி’ முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த பணி 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிகாலம் முடிந்து விட்டது. எனவே அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். இதில் 14 சப்- இன்ஸ்பெக்டர்கள், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 21 ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர்.

    மாற்றப்பட்டவர்களுக்கு பதிலாக 50 வயதுக்கு மேற்படாத சப்-இன்ஸ்பெக்டர்களையும், 40 வயதுக்கு மேற்படாத ஏட்டுகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணி நியமனம் செய்ய கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார்.

    திருப்பி அனுப்பப்பட்ட 60 பேரும், ஏற்கனவே பணியாற்றிய வேலையில் மீண்டும் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியில் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 15 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர்.


    இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல், சட்டத்துக்கு முரணாக வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வற்புறுத்துகிறார். அவரது உத்தரவை கடைபிடிக்காத போலீஸ் அதிகாரிகளை மிரட்டியும், திட்டியும் வருகிறார்.

    இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, ஒரு துணை சூப்பிரண்டு, 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு ஆகியோர் புகார் மனு கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களை பொன் மாணிக்கவேல் திருப்பி அனுப்ப முடியாது. இதுபோன்ற அயல் பணிகளில் 150 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேரை திருப்பி அனுப்ப முடியாது. அவர்களை திருப்பி அனுப்பவும் வேறு போலீஸ் அதிகாரிகளை நியமிக்கவும் டி.ஜி.பி.க்குதான் அதிகாரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொன் மாணிக்கவேல் பதவியை ஐகோர்ட்டு நீடித்துள்ளது. எனவே அரசும், காவல் துறையும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டில்தான் முறையிட முடியும்.

    எனவே பொன் மாணிக்கவேல் மீது குறிப்பிட்ட சில போலீசார் புகார் கொடுத்தது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டு மூலமே அணுக வேண்டும். எனவே அவர் மீது உடனடி யாக நடவடிக்கை பாயுமா? என்பது சந்தேகமே. #PonManickavel
    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை தமிழக அரசு எதிர்த்தால் தனது கருத்தை அறிய வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில், புராதான சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைது செய்ய தொடங்கினார்.

    இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ந்தேதி பிற்பகலில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

    நவம்பர் 30-ந்தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.


    இதையடுத்து வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். #PonManickavel
    சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க பொன் மாணிக்கவேலுக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். #statuesmuggling #ponmanickavel

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் நடந்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்தது. கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் இதற்கு முன்பு பெயர் அளவில் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கடத்தல் சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்யப்பட்டனர். பின்னணியில் இருப்பவர்கள் பற்றி எந்த விவரமும் வெளியே தெரியாது.

    ஆனால் பொன் மாணிக்கவேலின் அதிரடி விசாரணையில் சிலை கடத்தலுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் அவரே நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்டார்.

    சிலை கடத்தல் தொடர்பாக சினிமா டைரக்டர் சேகர் கைதாகி இருந்தார். இதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லாததால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட முக்கிய பிரமுகர்கள் பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிலை கடத்தலில் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கு மேலும் விஸ்வரூபமானது.

    இதற்கிடையே சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை பரிமாரிக் கொள்வதில் தமிழக அரசுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு ஆகஸ்டு 6-ந்தேதி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஒய்வு பெற இருந்தார். இந்த நிலையில் சிலை கடத் தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க அவருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேலின் ஓய்வு நாளில் இந்த கவுரவத்தை ஐகோர்ட்டு அளித்தது. நேர்மையாக செயல்பட்ட அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது.

    மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே பொன் மாணிக்கவேலின் ஒய்வை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஆனாலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை தான் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

    பொன்மாணிக்கவேல் இந்த வழக்கை மேலும் விசாரிக்க இருப்பதால் சிலை கடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலர் முன் ஜாமீன் பெற்று இருக்கிறார்கள். ஐகோர்ட்டின் அனுமதியை பெற்று அவர்களிடம் விசாரணை நடத்த பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை முடிவு செய்துள்ளது.

    அவரது விசாரணை மேலும் 1 ஆண்டுக்கு இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.  #statuesmuggling #ponmanickavel 

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #MadrasHC
    சென்னை:

    தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.


    இந்நிலையில், ஐஜி பொன் மாணிக்கவேல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள தன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஐஜி பொன் மாணிக்கவேல் முறையிட்டார்.

    அவரது மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட அந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PonManickavel
    சிலை கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IdolTheft #RanvirShah

    சென்னை:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜ், டி.எஸ்.பி. சுந்தரம் ஆகியோர் நடத்திய சோதனையில் பழங்கால கற்சிலைகள், கல்தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    ரன்வீர்ஷா வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையில் ரன்வீர் ஷாவின் நண்பரான பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் வீட்டிலும் சிலைகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. கடந்த 2 நாட்களாக வீட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி போலீசார் அங்கிருந்து 23 சிலைகளையும் மீட்டுள்ளனர்.


    இதுவரையில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபர் வீடுகளில் இருந்து மொத்தம் 247 சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து திருட்டு சிலைகளை ரன்வீர்ஷா வாங்கி இருப்பதாக போலீசார் கூறி வருகிறார்கள். ஆனால் ரன்வீர்ஷா தரப்பிலோ சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளன என்று கூறி வருகிறார்கள். இதனை சிலை தடுப்பு பிரிவு போலீசார் மறுத்து வருகிறார்கள்.

    ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் திருட்டு சிலைகள்தான் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரன்வீர்ஷா சென்னையில் இல்லை. அவர் வெளி மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ரன்வீர்ஷா தப்பி சென்று விட முடியாது. தீனதயாளன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் ரன்வீர்ஷா சேர்க்கப்படுவார். அதன்பின்னர் அவர் மீது கைது நடவடிக்கை பாயும். இதே போல பெண் தொழில் அதிபரான கிரண்ராவ் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தையும் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க சிலை தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் அனைத்து சிலைகளையும் அங்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் கோர்ட்டு அனுமதியுடன் ஊழியர் ஒருவரை சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கிரண்ராவ் பிரபலமான சிமெண்டு கம்பெனி நடத்தி வருகிறார். அதில் அவர் இயக்குனராக உள்ளார். ரன் வீர்ஷாவும் இந்த நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார்.

    இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நட்பின் அடிப்படையில் கிரண்ராவ், ரன்வீர்ஷாவுக்கு அந்த பொறுப்பை வழங்கியதாக கூறப்படுகிறது. #IdolTheft #RanvirShah

    சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள். #IdolSmugglingCases #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிப்பவர், தொழில் அதிபர் ரன்வீர்ஷா. இவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பழமையான சிலைகள், கலை நயமிக்க கல்தூண்கள் உள்பட 91 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் ‘சம்மன்’ அனுப்பினார்கள். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உஷார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் ரன்வீர்ஷாவின் புகைப்படத்துடன் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    தன்னை கைது செய்யாமல் இருக்க தொழில் அதிபர் ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    சம்மன் அனுப்பப்பட்ட ரன்வீர்ஷா சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராவார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி ரன்வீர்ஷா நேரில் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டார். ஆனால் கால அவகாசம் கொடுக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகை ஒன்றில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அந்த விருந்தினர் மாளிகையில் ரன்வீர்ஷாவுக்கு ஒரு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே ஏராளமான சிலைகள் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

    அங்கு 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார்கள். அங்கு 2 கலைநயமிக்க கல்தூண்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் வெளியே எடுத்தனர். அதில் ஒரு கல்தூண் சிலையோடு சேர்ந்து காணப்பட்டது. மேலும் அங்கு பூமிக்கடியில் ஏராளமான சிலைகளை புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் தோண்டு பணியில் போலீசார் இன்று(சனிக் கிழமை) ஈடுபடுகிறார்கள். #IdolTheft #IdolSmugglingCases #PonManickavel #RanvirShah
    சிலை கடத்தல் வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க கோரியது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில், சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பதிவான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. சொல்லி விட்டதால், இந்த வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது, மனுதாரர் வக்கீல் யானை ராஜேந்திரன், "சிலை மாயமான வழக்கில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

    ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

    இவரது கோரிக்கை குறித்து வருகிற 10-ந்தேதி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.  #ChennaiHighCourt #IdolSmugglingCases #IdolTheft
    பண்ணை வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். #PonManickavel
    சென்னை:

    சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சோதனை நடத்தி கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.

    இதன் பின்னர் திருவாரூர், திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவின் அரண்மனைகளிலும் சோதனை நடந்தது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    30-க்கும் மேற்பட்ட போலீசார் நடத்திய சோதனையில் 89 சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. முருகன், பெருமாள், அம்மன், நந்தி உள்ளிட்ட கற்சிலைகளும், அலங்காரம் மிக்க பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் 2 லாரிகளில் ஏற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதேபோல் தாம்பரம் அருகே கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவின் இன்னொரு பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் 43 சிலைகள் சிக்கியது. 2 வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பழமை வாய்ந்த கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புகிறார்கள். இதனை ஏற்று ரன்வீர்ஷா ஆஜராகும்போது 132 சிலைகளின் பின்னணியை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது. #IdolSmuggling #PonManickavel #IdolTheft #RanveerShah 
    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தஞ்சை பெரியகோவிலில் இன்று சோதனை நடத்திய நிலையில் ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்புடை 30 சிலைகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #IdolSmuggling
    சென்னை:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2½ அடி உயரம் கொண்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து இளவரசியான லோகமா தேவியின் 2 அடி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலேயே இருந்தது.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி சோதனை நடத்தி பழமையான சிலைகளை மீட்டு வருகிறார். அந்த வகையில் ராஜராஜ சோழன் சிலையும், லோகமா தேவி சிலையும் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    அங்குள்ள தனியார் மியூசியத்தில் இருந்து 2 சிலை களும் கடந்த மே மாதம் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த 2 சிலைகளும் பெரிய கோவி லின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தஞ்சை பெரியகோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுமார் 4½ மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தஞ்சை பெரியகோவிலில் இருந்து பல்வேறு சிலைகள் மாயமாகி இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.


    தஞ்சை பெரியகோவிலில் மொத்தம் 66 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமாகியுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்றும் ரூ.1000 கோடிக்கும் அதிகமான மதிப்புக் கொண்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தும் ராஜராஜ சோழன், லோகமா தேவி சிலைகளை போல குஜராத்துக்கு கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவைகளை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் இருந்து என்னென்ன சிலைகள் மாயமாகியுள்ளன என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-


    தஞ்சை பெரியகோவிலில் சுமார் 350 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலையும், 150 கிலோ எடை கொண்ட இன்னொரு நடராஜர் சிலையும் உள்ளது. இதில் 350 எடைக்கொண்ட சிலை தொன்மை மாறாமல் உள்ளது. 150 எடைக் கொண்ட நடராஜர் சிலை தொன்மையானது போல் காணப்படவில்லை. அதன் பின்னணி குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதன் மதிப்பு 100 கோடிக்கு மேலும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தங்கத்தினால் செய்யப்பட்ட கொள்கை தேவர் சிலையும், 4 வாசுதேவர் வெள்ளி சிலைகளும் காணாமல் போய் உள்ளன. அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை பிராட்டியார் தனது தாய், தந்தைக்கு 2 சிலைகளை செய்து வைத்துள்ளார். அந்த சிலைகளும் காணாமல் போய் உள்ளன.

    தனது தாய் வானவி மாதவியார், தந்தை பொன்மாளிகை துஞ்சினை தேவர் ஆகிய இருவருக்கும் சிலைகளை செய்து தினமும் பூஜைகள் செய்ய வேண்டும். அது எப்படி நடைபெற வேண்டும் என்பது போன்ற குறிப்புகளையும் குந்தவை பிராட்டியார் எழுதி வைத்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகள் செய்யபட்டுள்ளன. 2 சிலைகளுக்கும் தனித் தனியாக 2 கிரீடங்களும் இருந்துள்ளன. அதில் 3526 வைரங்களும் பதிக்கப்பட்டு இருந்தன. இப்போது இவை அனைத்தும் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இவைகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரியகோவிலை சுற்றி மதில் சுவரை கட்டிக் கொடுத்த ராஜராஜ சோழனின் தளபதியான மும்முடி சோழ பிரம்மா ராயன், ஐம்பொன் அர்த்தனாரீஸ்வரர் சிலையை செய்து கொடுத்துள்ளார். அந்த சிலையும் இப்போது இல்லை. ஆதித்திய சூரியன் என்கிற மூவேந்தவேளார் 13 சிலைகளை செய்து கொடுத்திருக்கிறார். அவையும் காணாமல் போய் உள்ளது.

    கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையில் சிவன்-பார்வதிக்கு நடுவில் முருகன் அணிகலன்களுடன் அமர்ந்திருப்பார். இப்போது அந்த சிலையில் முருகன் இருக்கிறார். ஆனால் அவர் தொன்மை வாய்ந்த முருகன் இல்லை. இடையில் வடிவமைக்கப்பட்டவர். இந்த முருகன் சிலையை ஏன் மாற்றி வைத்தார்கள். அதற்கு எப்படி அனுமதி பெறப்பட்டது என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.

    சோமஸ்கந்தர் பீடத்தின் அருகில் நீலோத் பாலாம்பிகை சிலையும் மாயமாகி இருக்கிறது. இந்த சிலைகள் அனைத்தும் எங்கு உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள பழமையான சிலைகளில் பெரும்பாலானவற்றை மாற்றிவிட்டு அதற்கு பதில் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை பெரியகோவிலில் 66 சிலைகள் இருப்பதாக கோவில் விமானத்தில்தான் குறிப்பு உள்ளது. அதனை பின்னணியாக வைத்தே சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். காணாமல் போன சிலைகள் பற்றி இதற்கு முன்னர் பணியில் இருந்த அதிகாரிகளிடமும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பெரியகோவில் சிலைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #ThanjavurPeriyaKovil #IdolTheft #IdolSmuggling #PonManickavel
    ×