search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க முறையீடு - பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க முறையீடு - பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    சிலை கடத்தல் வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க கோரியது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில், சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பதிவான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. சொல்லி விட்டதால், இந்த வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது, மனுதாரர் வக்கீல் யானை ராஜேந்திரன், "சிலை மாயமான வழக்கில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

    ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

    இவரது கோரிக்கை குறித்து வருகிற 10-ந்தேதி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.  #ChennaiHighCourt #IdolSmugglingCases #IdolTheft
    Next Story
    ×