search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling"

    • இந்த சிற்பங்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை திருப்பி அனுப்புகிறத-

    இந்த சிற்பங்கள் அனைத்தும் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. டெரகோட்டா, செம்பு மற்றும் கற்சிற்பம் ஆகியவை அடங்கும்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பெருநகர கலை அருங்காட்சியகம் (மெட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியம் தீவிரமாக மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவுகளை மிகவும் மதிப்பதுடன், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன.
    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை பகுதியில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன.

    சிலைகளின் உரிமையாளர், கலைப் பொருட்களை சேகரிப்பது தனது பொழுதுபோக்காக இருந்ததாகவும், 2008 மற்றும் 2015-ம் ஆண்டு தீனதயாளனிடம் இருந்து பழங்கால சிலைகளை வாங்கியதாகவும் தெரிவித்தார்.

    நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலையில் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவில் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவிலுக்கு சென்று விசாரித்ததில் இந்த சிலைகள் அங்கு திருடப்பட்டது உறுதியானது.

    மீதமுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    நின்ற பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் விரைவில் ஆதிகேசவ கோவிலில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

    • வாகன தணிக்கையில் 2 பேர் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் தீவிர விசாரணை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    சென்னை:

    தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி.பொன்.மாணிக்கவேல் பணியாற்றினார்.

    அவர் சிலைக்கடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அவரை திடீரென ரெயில்வே ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஸ்தபதி உள்பட பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.



    இதையடுத்து. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த நிலையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளையும், எதிர் காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. பின்னர், இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை, ஐகோர்ட்டு அமைத்தது.

    இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கினர்.

    ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் போலீசார், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளனர்.

    சிலைக்கடத்தல் வழக்கில் 47 பேரை கைது செய்துள்ளனர். ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த 28 ஆண்டுகளில் இந்த பிரிவு போலீசார் செய்த பணியை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ஓர் ஆண்டிலேயே முறியடித்து விட்டனர்.

    எனவே, சிலைக்கடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்கிறோம். அதேநேரம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புப் படையின் புலன்விசாரணை எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம்.

    நவம்பர் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டுக்கு நியமிக்கின்றோம். அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கவேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.

    மேலும் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதே நேரத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2 ஆயிரம் சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். #IdolSmuggling
    அம்பை:

    அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், திரிபலிநாதர் ஆகிய 4 சிலைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கோவிலில் திருடுபோன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்த கோவிலில் ஆய்வு செய்வதற்காக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று கல்லிடைக்குறிச்சிக்கு வந்தார். அவர் குலசேகரமுடையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கோவில் உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் சீதாலட்சுமி, முருகன், நிர்வாக அதிகாரிகள் வெங்கடேசன், ஜெகநாதன் ஆகியோரிடம் கோவில் நிலவரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள 17 விக்கிரகங்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இக்கோவிலில் இருந்து 4 சிலைகள் திருடுபோய் உள்ளன. இதில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலும், அம்மன் சிலை தென்ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அந்த சிலைகளை மீட்போம். மேலும் இக்கோவிலில் இருந்த 17 விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை மீண்டும் இக்கோவிலில் வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும். கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஆயிரம் சிலைகள் தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அவற்றை கண்டறிந்து அந்தந்த கோவில்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolSmuggling
    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. #PonManickavel #SupremeCourt
    புதுடெல்லி:

    சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு சார்பில் பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட்டது.

    “சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது அதிகார வரம்பு மீறல். குறிப்பிட்ட  துறை சார்ந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது அரசின் உரிமை. தமிழக அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு வேண்டுமானால் நீதிமன்றம் அதிகாரியை நியமிக்கலாம்.

    வழக்கு தொடர்பான சரியான ஆய்வுகள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் செயல்படுபவராக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம். குஜராத்தைச் சேர்ந்த சாராபாய் என்ற 95 வயது பெண் நடத்தும் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை, கடத்தல் சிலைகள் எனக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்பதால் பொன் மாணிக்கவேலின் தவறுகளை நீதிமன்றம் கண்டுகொள்வதில்லை.


    பொன் மாணிக்கவேல் மீது சக போலீசார் 60 பேர் புகார் அளித்துள்ளனர். அதிகப்படியான நம்பிக்கை காரணமாக அவர் மீது உயர்நீதின்றம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

    அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “இந்த வழக்கைப் பொருத்தவரை அதிகாரி பொன் மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா என்பதை நாங்கள் பார்க்கப் போவதில்லை. அவரது நியமனம் சரியா, தவறா? என்பதை மட்டுமே பார்க்கப்போகிறோம்” என்று தெரிவித்தனர். #PonManickavel #SupremeCourt

    சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolWing
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். 


    இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியுமா? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக போலீசார் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை பொன் மாணிக்கவேல் பிப்ரவரி 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த தமிழக அரசு மற்றும் போலீசார் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையையும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PonManickavel #IdolWing
    நெருக்கடி நிலையில் நீதித்துறை இருப்பதாக அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #HighCourt #TNGovt
    சென்னை:

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, ஆஜரான மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ‘‘கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் பூட்டு போடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கை விசாரணை அதிகாரி குமார் விசாரித்து வருகிறார். ஆனால், அவர் தன்னுடைய பணியை கவனிக்காமல், டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்’’ என்று குற்றம்சாட்டினார்.

    இதேபோல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

    பொன். மாணிக்கவேலின் குற்றச்சாட்டுக்களை அடுத்து, தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுவதாக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலை தொடர்ந்தால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.


    மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இன்று மீண்டும் நடந்த விசாரணையில், தனக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பொன். மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். பின்னர் கூறிய நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதத்தைப் பார்க்கும்போது, நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக தோன்றுகிறது. சிலை கடத்தல் வழக்கு தொடரப்பட்டத்தில் இருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை’’ என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில் சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை வரும் 21-ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HighCourt #TNGovt
    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். #Idolwing #HighCourt #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில், புராதன சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
     
    அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைதுசெய்ய தொடங்கினார்.

    இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

    நவம்பர் 30-ம் தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுபெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என சென்னை ஐகோர்ட்டில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் இன்று புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லை. எங்களுக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. #Idolwing  #HighCourt #PonManickavel 
    சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் மீது உடன் பணியாற்றிய 15 போலீசார் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று புகார் மனு அளித்தனர். #PonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்த பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

    அவரை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சிலை கடத்தல் பிரிவில் பணிபுரிவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து 60 போலீசார் ‘ஆன் டியூட்டி’ முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த பணி 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிகாலம் முடிந்து விட்டது. எனவே அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். இதில் 14 சப்- இன்ஸ்பெக்டர்கள், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 21 ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர்.

    மாற்றப்பட்டவர்களுக்கு பதிலாக 50 வயதுக்கு மேற்படாத சப்-இன்ஸ்பெக்டர்களையும், 40 வயதுக்கு மேற்படாத ஏட்டுகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணி நியமனம் செய்ய கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார்.

    திருப்பி அனுப்பப்பட்ட 60 பேரும், ஏற்கனவே பணியாற்றிய வேலையில் மீண்டும் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியில் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

    இந்த நிலையில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட 15 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர்.


    இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல், சட்டத்துக்கு முரணாக வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வற்புறுத்துகிறார். அவரது உத்தரவை கடைபிடிக்காத போலீஸ் அதிகாரிகளை மிரட்டியும், திட்டியும் வருகிறார்.

    இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, ஒரு துணை சூப்பிரண்டு, 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு ஆகியோர் புகார் மனு கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களை பொன் மாணிக்கவேல் திருப்பி அனுப்ப முடியாது. இதுபோன்ற அயல் பணிகளில் 150 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேரை திருப்பி அனுப்ப முடியாது. அவர்களை திருப்பி அனுப்பவும் வேறு போலீஸ் அதிகாரிகளை நியமிக்கவும் டி.ஜி.பி.க்குதான் அதிகாரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொன் மாணிக்கவேல் பதவியை ஐகோர்ட்டு நீடித்துள்ளது. எனவே அரசும், காவல் துறையும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டில்தான் முறையிட முடியும்.

    எனவே பொன் மாணிக்கவேல் மீது குறிப்பிட்ட சில போலீசார் புகார் கொடுத்தது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டு மூலமே அணுக வேண்டும். எனவே அவர் மீது உடனடி யாக நடவடிக்கை பாயுமா? என்பது சந்தேகமே. #PonManickavel
    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
     
    இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

    இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார்.


    இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு  மீது இன்று  நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

    சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும்  இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
    சென்னை:

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.


    இந்நிலையில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அபய்குமார் சிங் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
    ×